ஆந்திரா சாப்பல புலுசு (மீன் குழம்பு) செய்வது எப்படி?





ஆந்திரா சாப்பல புலுசு (மீன் குழம்பு) செய்வது எப்படி?

பொதுவாக மீன்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு பொருளாகும். 
ஆந்திரா சாப்பல புலுசு (மீன் குழம்பு) செய்வது எப்படி?
சில உணவு பொருட்கள் உணவில் சேர்த்து கொள்ளும் போது ஆரோக்கியமாக இருந்தாலும் அதனை அதிகமாக சேர்த்து கொள்ளும் பொழுது நஞ்சாக மாறுகிறது.

பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. 

கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம். காரணம், சாச்சுரேட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது. மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது. 

மனித ஆயுளையும் கூட்டுகிறது. கண்பார்வை குறைபாடு முதல் தைராய்டு பிரச்சனை வரை தீர்வதற்கு மீன்கள் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன. 
மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது. நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது. 

மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தவிர, மட்டன், சிக்கன் போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். 

மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம்.
என்னென்ன தேவை?

மீன் – 300 கிராம்

எண்ணெய் – 1/2 கப்

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

வெந்தயம் – 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

தக்காளி – 1

கொத்தமல்லி தூள் / மல்லி பொடி – 2 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு

தண்ணீர் – 2 கப்

உப்பு
எப்படி செய்வது?
ஆந்திரா சாப்பல புலுசு
புளியை 1 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து பொடித்து, பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி நறுக்கிய தக்காளி, சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். 

மல்லிதூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறிய பின் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்க்கவும். கிரேவி பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை சேர்த்து மீனுடன் மசாலா கலக்கும் வரை கிளறி கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்க்கவும். 

சிறிது கறிவேப்பிலையை தூவி உப்பு சரி பார்த்து சில நிமிடங்கள் கழித்து மூடி வைத்து மீனை வேகவிட்டு இறக்கினால் ஆந்திரா சாப்பல புலுசு ரெடி.
Tags: