சுவையான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி?





சுவையான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி?

தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். 
சுவையான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி?
தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. 

தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது. 
தேங்காய் பால் அதிகம் அருந்துபவர்களுக்கு வயதாவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, தோலில் பளபளப்பு தன்மையை அதிகம் கூட்டுகிறது. 

தேங்காய் பால் அவ்வப்போது சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்று ஏற்படுவததற்கான வாய்ப்புகள் குறைகிறது. 

சரி இனி தேங்காய் பால் கொண்டு சுவையான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையான பொருட்கள் :.

அரிசி - 2 கப்,

தேங்காய் - அரை மூடி

வெங்காயம் - 2,

பச்சை மிளகாய் - 2,

இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்,

பட்டை - 3,

லவங்கம் - 5,

ஏலக்காய் - 3,

பிரியாணி இலை - 2,

கறிமசால் பொடி - கால் டீஸ்பூன்,

முந்திரி - 50 கிராம்,

நெய் - 100 கிராம்,

புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை :.
சுவையான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி?
தேங்காயை அரைத்து 4 கப் பால் எடுத்து கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி ஊற வைத்து கொள்ளவும். ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றிச் சூடேறியவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

பின்பு பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், புதினா சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால், கறி மசால் பொடி, உப்பு சேர்த்துக் கொதி வரும் வரை காத்திருக்கவும்.
கொதி வந்ததும் அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும். பின்னர் மீதம் உள்ள நெய்யில் முந்திரியை வறுத்து, சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.

கமகம வாசனைக்குக் கொத்தமல்லி இலையை சேர்க்கவும். இதனுடன் பெப்பர் சிக்கன் அல்லது மட்டன் குழம்பு சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Tags: