வேர்க்கடலை – அவல் உப்புமா செய்வது எப்படி?





வேர்க்கடலை – அவல் உப்புமா செய்வது எப்படி?

தேவையானவை:
கெட்டி அவல் – 200 கிராம்

பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)

வேர்க்கடலை – ஒரு கைப்பிடி அளவு (வேக வைக்கவும்)

பச்சை மிளகாய் – 2
சீரகத்தூள் – 2 சிட்டிகை

தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை – சிறிதளவு

கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு. 

செய்முறை:
வேர்க்கடலை – அவல் உப்புமா
வேர்க்கடலையை 12 மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும். அவலை நன்கு அலசி தண்ணீரை வடிய விடவும். 

பிறகு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் அவலைச் சேர்த்து மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு புரட்டி, லேசாக தண்ணீர் தெளித்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேக விடவும். 

பிறகு வேக வைத்த வேர்க்கடலை, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்த மல்லித்தழை தூவி, தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்கு புரட்டி இறக்கிப் பரிமாறவும்.
Tags: