ரசிக்க ருசிக்க தெரியுமா அரிசி சாதத்தில் பகோடா செய்யலாம். மதியம் வடித்த சாதம் மீந்து விட்டால் கவலை வேண்டாம். பகோடா செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மீந்த சாதம் - ஒரு கப்
கோதுமை மாவு - அரை கப்
நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பகோடா பொரிக்க
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
மீந்த சாதத்தை மிக்சியில் போட்டு ஒரு அரை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அத்துடன் சிறிது கடலை மாவு, சிறிது கோதுமை மாவு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
அதில் நறுக்கின வெங்காயம், நறுக்கின இஞ்சி, பொடியாய் நறுக்கின பச்சை மிளகாய், தேவையான உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கிளறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் இந்த மாவினைக் கிள்ளிப் போட்டு பகோடாக்களாகப் பொரித்து எடுக்கலாம். சுவையான அரிசி சாத பக்கோடா தயார்.