தேவையானவை:
அரிசி - கால் கிலோ,
பிஞ்சுக்
கத்திரிக்காய் - 6,
வெங்காயம் - ஒன்று,
கடுகு - கால் டீஸ்பூன்,
கரம்
மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
மஞ்சள்தூள் - ஒரு
சிட்டிகை,
இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான
அளவு.
செய்முறை:
குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு இரு பங்கு தண்ணீர்
விட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு
தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு, நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து, வதக்கியதும் இஞ்சி -பூண்டு
விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டுக் கலந்து வதக்கவும்.
கத்திரிக்காய் வெந்து மணம் வந்ததும் இறக்கவும். இந்தக் கலவையில் சூடான
சாதத்தைச் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பரிமாறலாம்.