டேஸ்டியான முட்டை பாண் பிரியாணி செய்வது எப்படி?





டேஸ்டியான முட்டை பாண் பிரியாணி செய்வது எப்படி?

முட்டை பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு சத்தான உணவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது. 
டேஸ்டியான முட்டை பாண் பிரியாணி செய்வது எப்படி?
அவை உயர்தர புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் செலினியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாக இருக்கிறது. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகளை சாப்பிடக்கூடாது. 

ஏனெனில் முட்டை சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனை அதிகரிக்கிறது. எனவே சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகள் முட்டைகளை சாப்பிடக் கூடாது. ஏற்கனவே அதிக எடை கொண்டவர்கள் முட்டையை சாப்பிடக்கூடாது. 

சரி இனி இறால் முட்டை பயன்படுத்தி டேஸ்டியான முட்டை பாண் பிரியாணி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையான பொருட்கள்

பாண் -1 இறாத்தல்
முட்டை- 5

இறால் - 100 கிராம்

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ கிராம்

கறிமிளகாய் - 50 கிராம்

வெங்காயம் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 4

தக்காளிப் பழம் - 2

இஞ்சி, பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி

தக்காளிச் சோஸ் - 3 மேசைக்கரண்டி

சோயா சோஸ் - 2 மேசைக்கரண்டி

மாஜரின் - 50 கிராம்

எண்ணெய் - 500 மில்லி லீற்றர்

மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 நெட்டு

கடுகு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முட்டை பாண் பிரியாணி
முதலில் உருளைக் கிழங்கு, கறிமிளகாய், வெங்காயம் என்பவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். 

பின் பச்சை மிளகாயை சிறிதாக கீறவும். தாச்சியில் எண்ணெய் ஊற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டிய உருளைக் கிழங்கினை நன்றாக வேகும் வரை பொரித்தெடுக்க வேண்டும். 
பின் பாணை சிறு சிறு துண்டுகளாக்கி வைக்கவும். இறாலை சுத்தம் செய்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பொரித்து வைக்கவும். 

தக்களிப் பழத்தை மிக்ஸியில் இட்டு கூழாக அரைக்க வேண்டும். பின் முட்டையில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 

பின் ஒரு தாச்சியில் மாஜரீனை இட்டு மாஜரீன் நன்கு சூடாகியதும் அதில் முதலில் கடுகை இட்டு அது வெடித்தவுடன் இஞ்சிப்பூண்டு விழுதினைச் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். 

பின் அதனுடன் வெங்காயம், கறிமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்பவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். 

நன்றாக வதங்கிய வுடன் அதனுடன் அடித்து வைத்துள்ள முட்டையினை சிறிது சிறிதாக இட்டு வறை போல நன்றாகக் கலக்கவும். பின் தக்களிக் கூழினை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அதன் பின் உருளைக் கிழங்கை, இறால், உப்பு, தக்காளிச் சோஸ், சோயாச் சோஸ் என்பவற்றைச் சேர்த்து நன்றாக கிளறவும். 
நன்றாக கலவை திரண்டு வந்ததும் அதனுடன் சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துள்ள பாணை இட்டு நன்றாக பிரட்ட வேண்டும். 

சுவையானதும் ஆரோக்கி யமானதுமான முட்டை பாண் பிரியாணி ரெடி! சூடுடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.
Tags: