தேவையான பொருட்கள்.:
புளித்த தயிரை கடைந்த மோர் – 2 கப்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க.:
கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 2,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை.:
மோருடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 3 நிமிடங்கள் கொதி விட்டு நிறுத்தவும்.
தாளிக்கக் கொடுத்துள்ள வற்றை தாளித்து மோரில் சேர்க்கவும். (விருப்பப்பட்டால் பெருங்காயத் தூளும் சேர்த்துக் கொள்ளலாம்).