சுவையான இஞ்சி பிரண்டை துவையல் செய்வது எப்படி?





சுவையான இஞ்சி பிரண்டை துவையல் செய்வது எப்படி?

பிரண்டை வேர் மற்றும் தண்டுப் பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக் கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது.
சுவையான இஞ்சி பிரண்டை துவையல் செய்வது எப்படி?
அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். 

இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும். ஞாபகசக்தியை பெருக்கும். மூளை நரம்புகளை பலப்படுத்தும். எலும்புகளுக்கு சக்தி தரும். 

ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் வனப்பும் பெறும்.
எலும்புகள் சந்திக்கக் கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கி விடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப் படுவார்கள். 

மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக் கொள்ளும். 

இதனால் பாதிக்கப் பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப் படுவார்கள். இந்தப் பாதிப்பு களிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.
தேவையான பொருட்கள் . :

இளம் தளிரான கொழுந்துப் பிரண்டைத் துண்டுகள் ஒரு கைப்பிடி அளவு,

இஞ்சி ஒரு சிறிய துண்டு,

புளி ஒரு நெல்லிக்காய் அளவு,

உளுத்தம் பருப்பு 4 டேபிள் ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் 2,

கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு,

நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்,

உப்பு தேவையான அளவு.
செய்முறை . :
சுவையான இஞ்சி பிரண்டை துவையல் செய்வது எப்படி?
பிரண்டையைப் பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை நல்லெண்ணெய் விட்டு வதக்கவும். உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக நல்லெண்ணெய் விட்டு வறுக்கவும்.
வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சிறிது அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

குறிப்பு.:

பிரண்டை, இஞ்சி ஜீரண சக்தியைத் தரும். வாயுத்தொல்லை நீங்கும். இந்தத் துவையலை சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால்… அசத்தல் சுவையில் இருக்கும். சுட்ட அப்பளம், வடகம் இதற்கு நல்ல காம்பினேஷன்.
Tags: