குடைமிளகாய் புலாவ் செய்வது எப்படி?





குடைமிளகாய் புலாவ் செய்வது எப்படி?

தேவையானவை
பாசுமதி அரிசி - ஒரு கப்,

குடைமிளகாய் - 2,

வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,

புதினா, கொத்த மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு,

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

பட்டை - சிறு துண்டு,

பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன்,

எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
குடைமிளகாய் புலாவ்
வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். குடைமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். 

பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து கொள்ளவும். 

அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, சூடானதும் பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி, புதினா, கொத்த மல்லித்தழை சேர்த்துக் கிளறவும். படம் இதைக் கொண்டிருக்க லாம்: உணவு
Tags: