அயிலை மீன் நாட்டு குழம்பு செய்வது எப்படி?





அயிலை மீன் நாட்டு குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை :
முழு அயிலை சுத்தம் செய்தது - 10

நல்லெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம்- 2,

தக்காளி - 3 சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.

பச்சை மிளகாய் (கீறியது) - 3

வெந்தயம் - 3 டீஸ்பூன்

கடுகு - 2 டீஸ்பூன்

சீரகம் - 2 டீஸ்பூன்

பூண்டு - 4

கறிவேப்பில்லை - 1 கொத்து

மீன் மசாலா தூள் - 3 டீஸ்பூன்

மஞ்சல் தூள் -1 டீஸ்பூன்

மிளகாய் தூள் -2டீஸ்பூன்

மல்லிப்பொடி - 2டீஸ்பூன்

புளி - பெரிய எலுமிச்சை அளவு தண்ணீரில் கரைத்து

புளி கரைசலை தயார் செய்யவும்.

தேங்காய்ப்பால் - 1 டம்ளர்

கொத்துமல்லி - 2 டீஸ்பூன்

வதக்கிய வெண்டைக்காய் (நறுக்கியது)-10

உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :

* மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும் எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து கொள்ளவும்
அயிலை மீன் நாட்டு குழம்பு
* அகன்ற பாத்திரம் சூடானவுடன் ஆயிலை ஊற்றி கடுகு சீரகம், வெந்தயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை நன்றாக வதக்கவும்.

* அரைத்த பெரிய வெங்காயம் - தக்காளி விழுதையும் சேர்த்து வதக்கவும். மீன் மசாலா தூள், மஞ்சல் தூள், மிளகாய் தூள், மல்லிப்பொடி சேர்த்து வதக்கவும்.
* புளி கரைசலை சேர்க்கவும்..உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். மீனை சேர்க்கவும். வெண்டைக்காயை வதக்கிக் கொள்ளவும்.    

வதக்கிய வெண்டைக்காய் சேர்க்கவும்.தேங்காய்ப்பால் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.

* கொத்துமல்லி தூவி இறக்கவும் இப்போது அயிலை மீன் நாட்டு குழம்பு ரெடி. இதே முறையில் மற்ற மீன் வகைகளையும் செய்யலாம்.
குறிப்பு
ஆங்கிலத்தில் மேக்கேரில் ஃபிஸ் என்று அழைப்பார்கள். அயிலை மீனில் ஒமேகா-3 அதிகமாக உள்ளது. 

ஒமேகா-3 இதய மற்றும் கொலஸ்ட்ரால் வியாதிகளுக்கு அருமருந்து. •கட்டுப்படாத சர்க்கரை வியாதி கூட ஒமேகா-3 கட்டுப்படுத்தும்.
Tags: