பனீர் பட்டாணி மசாலா செய்வது எப்படி?





பனீர் பட்டாணி மசாலா செய்வது எப்படி?

தேவையானவை
பனீர் - 1 கப் (வெட்டியது )

பட்டாணி - 1/2 கப்

பால் - 3 ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும் )

பச்சை மிளகாய் - 1

சீரகம் - 1 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்

மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 1/2 ஸ்பூன்

மல்லித்தழை - சிறிது

உப்பு - தேவைக்கு
அரைக்க :

பெரிய வெங்காயம் - 1(நறுக்கியது )

தக்காளி - 3

பட்டை - 1 சிறிய துண்டு

கிராம்பு - 1

எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை :
பனீர் பட்டாணி மசாலா
வாணலில் எண்ணெய் விட்டு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்கி அரைத்துக் கொள்ளவும் . பட்டாணியை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். 
பனீர் துண்டுகளை தோசைக்கல்லில் ,எண்ணெய் சிறிது விட்டு டோஸ்ட் செய்து கொள்ளவும் .

பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு , சீரகம் போட்டு வெடித்ததும் ,வெங்காயம் , பச்சைமிளகாய் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் .

அதனுடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும் .அதனுடன் மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் ,மஞ்சள்த்தூள் ,உப்பு சேர்த்து 3-5 நிமிடங்கள் வதக்கவும் .

பின் அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து ,5 நிமிடங்கள் கொதிக்க விடவும் . பிறகு அதில் பால் சேர்த்து கொதிக்க விடவும் . 
அதில் பட்டாணி ,பனீர் சேர்த்து கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான பனீர் பட்டாணி மசாலா தயார் .இது சப்பாத்தி ,ரொட்டிக்கு சுவையாக இருக்கும் .
Tags: