சுவையான பச்சை மிளகாய் பச்சடி செய்வது எப்படி?





சுவையான பச்சை மிளகாய் பச்சடி செய்வது எப்படி?

0
பாசிப்பருப்பு நம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அது நமக்கு ஆரோக்கியத்தை தருகிறது. மேலும் மன அழுத்தம் மற்றும் மன மனம் இருக்கும் உடையவர்கள் பாசிப்பருப்பு தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சுவையான பச்சை மிளகாய் பச்சடி செய்வது எப்படி?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாசிப்பருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.

பருப்பு, நார்ச்சத்து நிறைந்ததாக இருப்பதால், மனநிறைவை மேம்படுத்தவும், நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கவும் உதவுகிறது. 

பருப்பு வகைகள் நுண்ணூட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் குறிப்பாக பி வைட்டமின்கள் போன்றவை.
பாசிப்பருப்பில் இருக்கும் நார்ச்சத்து ஜீரண மண்டலத்தை வலிமையாக்கி செரிமான பிரச்சனையை நீக்குகிறது. வயிற்றில் இருக்கும் சூட்டு பிரச்சனையும் குறைக்க உதவுகிறது.

முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கு பாசிப்பருப்பு உதவுகிறது. எடை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்பவர்கள் பாசிப்பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

ஏனெனில் இதை சாப்பிடும் போது அடிக்கடி பசி எடுப்பதை தடுக்கும். எனவே உடல் எடை குறைப்பவர்கள் இதை சாப்பிடலாம்.
தேவையானவை:

பாசிப்பருப்பு – அரை கப்,

பச்சை மிளகாய் – 50 கிராம்,

சின்ன வெங்காயம் – 10 அல்லது பெரிய வெங்காயம் – 1,

புளி – நெல்லிக்காய் அளவு,

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

கடுகு – அரை டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்,

வெந்தயம் – கால் டீஸ்பூன்,

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.
குடல் புழுவை வெங்காயத்தை வைத்து எப்படி வெளியேற்றலாம்?
செய்முறை:
சுவையான பச்சை மிளகாய் பச்சடி செய்வது எப்படி?
பாசிப்பருப்பை நிறம் மாறாமல் வாசனை வரும் வரை வறுத்து, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடுங்கள். பச்சை மிளகாயை கால் அங்குல அளவுக்கு வட்டங்களாக நறுக்கிக் கொள்ளுங்கள். 
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்குங்கள் (பெரிய வெங்காயம் என்றால் பொடியாக நறுக்குங்கள்).

எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து பொன்னிறமானதும், வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேருங்கள்.

சிறு தீயில் வைத்து பச்சை வாசனை போகக் கொதிக்க விடுங்கள். பாசிப்பருப்பை சேர்த்து, மேலும் ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்குங்கள். 
பேய் ஓட்டுவதாக கூறிய சாமியார் - கதறி அழுத பெண் !
கட்டு சாதத்துக்கும் தயிர் சாதத்துக்கும் டக்கரான ஜோடி இது. இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)