மாங்காய் இஞ்சி – கொண்டைக்கடலை பச்சடி செய்வது எப்படி?





மாங்காய் இஞ்சி – கொண்டைக்கடலை பச்சடி செய்வது எப்படி?

0
கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 
மாங்காய் இஞ்சி – கொண்டைக்கடலை பச்சடி செய்வது எப்படி?
இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. 

மேலும் இதில் கரையும்  நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி  செய்கிறது. 

ஹார்மோன் ஏற்றத்தாழ்வைத் தடுக்கும். கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோ போரோசிஸ்  போன்றவற்றை எதிர்த்துப் போராடும். 
மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் உதவும். வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை தவிர்ப்பது நல்லது. 

இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். எனவே இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது.
தேவையானவை:

துவரம் பருப்பு – அரை கப்,

குடமிளகாய் (சிறியது) – 1,

கொண்டைக் கடலை (ஊற வைத்தது) – கால் கப்,

மாங்காய் இஞ்சி – 2 துண்டு,

சின்ன வெங்காயம் – 10,

பச்சை மிளகாய் – 5,

புளி – நெல்லிக்காய் அளவு,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கு.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்,

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன். 
செய்முறை:
மாங்காய் இஞ்சி – கொண்டைக்கடலை பச்சடி செய்வது எப்படி?
துவரம் பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து மலர வேக வையுங்கள். கொண்டைக் கடலையை உப்பு சேர்த்து வேக வையுங்கள். மாங்காய் இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்குங்கள். 

குடமிளகாயை பொடியாக நறுக்குங்கள். சின்ன வெங்காயத்தை யும் தோலுரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் ஒரு அங்குல நீளத்துக்கு நறுக்கிக் கொள்ளுங்கள். 

எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், மாங்காய் இஞ்சி, குடமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, 1 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிய புளித் தண்ணீரை சேருங்கள்.
பச்சை வாசனை போகக் கொதித்த பின் பருப்பு, கொண்டைக் கடலை, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். செட்டி நாட்டு திருமண விருந்தில் இந்தப் பச்சடி மிகவும் பிரபலம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)