என்னென்ன தேவை?
உதிர்த்த புரோக்கோலி பூக்கள் - 10,
கடலை மாவு - 1 கரண்டி,
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
விரும்பினால் இட்லிமாவு - 1 கரண்டி.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இட்லி மாவு, மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயத் தூள் அனைத் தையும் கலந்து
சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து புரோக்கோலி பூக்களை ஒவ்வொன் றாக மாவில் முக்கி சூடான எண்ணெயில் பொரித் தெடுத்து சூடாக பரிமாறவும்.