இந்த மீனை ஒருவர் உண்பதால் சந்ததியே பலியாகும் !





இந்த மீனை ஒருவர் உண்பதால் சந்ததியே பலியாகும் !

0
மீன்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருளும் இல்லை என்பதால் மீன் அனைத்து வயதினருக்கும் ஏற்ற, சிறந்த ஓர் உணவாக உள்ளது.
மொய்மீன்

சிலருக்கு மீன் உணவுகளைப் பார்க்கும் போது மட்டுமல்ல, மீனைப் பற்றிப் பேசினாலே நாவில் எச்சில் ஊறத் தொடங்கி விடும். அந்த அளவுக்குப் பலரின் நாக்குடன் சேர்த்து மனதையும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது மீனின் ருசி. 

இறைச்சியை விரும்பாத அசைவப் பிரியர்கள் கூட மீனை விரும்பக் காரணம் அதில் உள்ள தனிப்பட்ட சுவை தான். ஒரு தட்டில் சுடச்சுடச் சோற்றுடன் சூடான மீன் குழம்பும், அதற்குத் தொட்டுக் கொள்ள இரண்டு வறுத்த மீன் துண்டுகளும் இருந்தால் போதும். 

மீன் பிரியர்கள் தங்கள் கவலைகளை எல்லாம் மறந்தே போய் விடுவார்கள். மீனுக்கும் அதன் காதலர்களுக்கும் உள்ள ஆழமான பந்தத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

ஆனால் மிகவும் ஆபத்து நிறைந்த ஒரு மீன் வகை உள்ளது. இந்த மீன் பூ விரால், மொய்மீன், தேளி விரால் என ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் வளர்த்து விற்பனை செய்யப்படும். 

இது உண்மையில் ஆஃப்ரிக்கன் கெளுத்தி எனும் மீன். எப்படியோ ஆசிய நாடுகளுக்குள் பரவி அஸ்ஸாம் பிரம்மபுத்திரா ஆற்றின் வழியாக இந்தியாவிற்கு வந்து சேர்ந்ததாக இதன் வரலாறு கூறப்படுகிறது. 

உங்கள் குடும்பத்தில் நீங்கள் ஒருவர் உண்டால், உங்களின் சந்ததி முழுவதும் பலியாகும்.. உஷாராக இருங்க, மார்கெட்டில் மலிவு விலை என்று வாங்கிடாதீங்க.

கடற்கரையிலிருந்து தொலைவில் இருக்கும், கடல் மீன்கள் கிடைப்பது அரிதாக உள்ள மாவட்டங்களில் இது குட்டைகள் அமைத்து செயற்கையாக வளர்க்கப்படுகிறது. 

இந்த மீன் அசைவம் மட்டுமே சாப்பிட்டு ராட்சஷதனமாக வளரக்கூடியது. இந்த மீனின் வருகையால் தான் நம் உள் நாட்டு நன்னீர் மீன்களான அயிரை, உளுவை, ஆரால் போன்றவை அழிந்து வருவதாக மீன் வளத்துறையினர் கூறுகிறார்கள். 

இது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை இந்த மீனுக்கு துரித வளர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு கோழிக்கடையில் இருந்து வீசி எறியப்படும் தேவையற்ற குடல் போன்ற கழிவுகள் இவை இருக்கும் 

குட்டையில் கொட்டப்படுகின்றன . இந்த மீன் வளர்ப்பு பல வெளி நாடுகளில் மட்டுமல்ல, நம் இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

பூ விரால் மீன், தேளிவிரால் மீன்
இந்த மீன் சாப்பிடுவோருக்கு பல விதமான தோல் நோய்கள், ஆண்மைக் குறைவு, புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். 

இது குறித்து பல பத்திரிக்கைகள் பல்வேறு செய்திகள் வெளியிட்டிருக்கின்றன என்றாலும் இன்னமும் இந்த மீன் திருட்டுத்தனமாக வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது. 

இது குறித்து விழிப்புணர்வு கண்டிப்பாக தேவை, நம்மில் பலருக்கும் இது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது நம் மரபுகளை பாதிக்கும் என்பதால், இதை அனைவரது கவனத்திற்கும் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்..
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)