தக்காளி பனீர் செய்வது | Tomato Paneer Recipe !





தக்காளி பனீர் செய்வது | Tomato Paneer Recipe !

0
தேவையானவை

பெண்களால் சபலப்படும் ஆண்கள் படியுங்கள் !
பனீர் - கால் கிலோ

பச்சை மிளகாய் - 2

தக்காளி - கால் கிலோ

வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

தக்காளி கெட்சப் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

சர்க்கரை - அரை தேக்கரண்டி
செய்முறை :
தக்காளி பனீர் செய்வது

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தக்காளியை போட்டு வேக வைத்து எடுத்து அதன் தோலை நீக்கி மசித்து விடவும்.

பிறகு பனீரை சிறிய துண்டுக ளாக நறுக்கி வாணலியில் போட்டு பொன்னிற மாக பொரித்து எடுக்க வேண்டும்.

பின்னர் வாணலியில் வெண்ணெய் போட்டு உருகியதும் மசித்த தக்காளி விழுதினை ஊற்றி நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி கெட்சப், உப்பு, சர்க்கரை ஆகிய வற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.
அதில் பொரித்து வைத்திருக்கும் பனீரை போட்டு ஒரு முறை பிரட்டி இறக்கவும். 

சுவையான தக்காளி பனீர் ரெடி. தக்காளி கலவையை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது. பனீரை அதிக தீயில் வறுக்கக் கூடாது
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)