என்னென்ன தேவை?
பழுத்த தக்காளி – 4,
துருவிய வெல்லம் – 1/4 கப்,
நெய் – 2 டேபிள் ஸ்பூன்,
திக்கான தேங்காய்ப் பால் – 1 கப்,
நறுக்கிய முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்,
பல்லு பல்லாக கீறிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்,
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
முந்திரி, கீறிய தேங்காயை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய தக்காளி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும், வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு, தேங்காய் ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும், வறுத்த முந்திரி, வறுத்த தேங்காய், ஏலப்பொடி தூவி பரிமாறவும்.
குறிப்பு:
இதே முறையில் வாழைப்பழம் மற்றும் மாம்பழத்தை யும் சேர்த்து செய்யலாம்.