தேவையானவை:
துருவிய கேபேஜ் (கோஸ்) – ஒரு கப்,
உருளை கிழங்கு – ஒன்று (வேக வைத்து மசிக்கவும்),
பனீர் (துருவியது) – அரை கப்,
கொத்த மல்லி இலை – சிறிதளவு,
இஞ்சி – பூண்டு – பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்,
பிரெட் தூள் – கால் கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் துருவிய கேபேஜ், மசித்த உருளை கிழங்கு, துருவிய பனீர், கொத்த மல்லி, இஞ்சி – பூண்டு – பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகிய வற்றை சேர்த்து நன்கு கலந்து பிசையவும்.
கலவையில் சிறிதளவு எடுத்து நீளவாட்டில் உருட்டிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் உருட்டிய கலவையை பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு:
இதற்கு டொமேடோ சாஸ் தொட்டு சாப்பிடலாம்.