உடல் குளிர்ச்சி தரும் வெந்தய க்கீரை சாம்பார் செய்வது எப்படி ...!!
உடல் குளிர்ச்சி மற்றும் குடல் புண்களை ஆற்றும் வெந்தயக் கீரை சாம்பார்..
தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை – 2 சிறுகட்டு,
துவரம் பருப்பு – ஒரு கப்,
புளி – எலுமிச்சைப் பழ அளவு,
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
துவரம் பருப்பு – ஒரு கப்,
புளி – எலுமிச்சைப் பழ அளவு,
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து கொள்ளவும். வெந்தயக் கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும்.
துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து கொள்ளவும். வெந்தயக் கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும்.
வாணலியில் கரைத்த புளியைக் ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்க விட்டு, கீரை வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும்.
எண்ணெயில் கடுகு, பெருங்காயத் தூள் தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு:
வெந்தயக் கீரை குளிர்ச்சி தரும்; வயிற்றுப் புண் ஆற்றும்.