செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல் செய்முறை / Chettinadu Eggplant Curry Recipe !





செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல் செய்முறை / Chettinadu Eggplant Curry Recipe !

0
தேவையான பொருள்கள் :

கத்தரிக்காய் - 6

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

கடலை மாவு - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

வறுத்து பொடிக்க :
தனியா - 2 ஸ்பூன்

கடலை பருப்பு - 1 ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - 1ஸ்பூன்

மிளகு - அரை ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்
கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து பொடிக்க கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை தனித்தனி யாக போட்டு வறுத்து ஆற வைத்து சற்று கொர கொப்பாக பொடித்து கொள்ள வேண்டும். கத்தரிக் காயை வட்ட வட்டமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.
அடுத்து தண்ணீரை வடித்து விட்டு அதன் மேல் மிளகாய் தூள், கடலை மாவு, மஞ்சள் தூள், உப்பு எல்லா வற்றையும் சேர்த்து கத்தரிக் காயின் மேல் எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 

அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெயை ஊற்ற வேண்டும். தோசை கல் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கத்தரிக்காய் துண்டுகளை பொடித்து வைத்த மசாலாவில் பிரட்டி தோசை கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட வேண்டும். 

2 நிமிடம் ஆனதும் திருப்பி போட வேண்டும். இருபுறமும் பொன்னிற மானதும் எடுத்து விட வேண்டும். மீதமுள்ள எல்லா கத்தரிக்காய் துண்டு களையும் இதே முறையில் வறுத்து எடுத்து சுவைக்கலாம் . சூப்பரான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)