தேவையானவை
மக்காச் சோள மாவு – 1 கப்
தண்ணீர் – 3 கப்
சர்க்கரை – 2 கப்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
முந்திரி – 1 டீஸ்பூன்
திராட்சை – 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் மக்காச் சோள மாவுடன் 11/2 கப் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியை சூடாக்கி சர்க்கரை மீதமுள்ள தண்ணீர் சேர்க்கவும்.
பாகு பதத்தில் வந்தவுடன், சோள மாவினை சேர்த்துக் கிளறி விடவும். இதனை கிளறிக் கொண்டோ முந்திரி, திராட்சை, கேசரி பவுடர், நெய், எலுமிச்சைச் சாறு, ஏலக்காய்ப் பொடி சேர்த்து கிளறவும்.
இந்தக் கலவை உருண்டு திரண்டு வரும் போது, இதனை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
முந்திரியால் அதன் மேல் அலங்கரித்து, ஆறியதும் நமக்கு விருப்பமான வடிவங் களில் வெட்டிக் கொள்ளவும்.