தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகுடன் காய்கறிகளை சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு – 1 கப்
கேரட் – 50 கிராம்
பீன்ஸ் – 50 கிராம்
உருளைகிழங்கு – 50 கிராம்
வெங்காயம் – 50 கிராம்
மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
தாளிக்க :
கடுகு, உளுந்தம் பருப்பு, எண்ணெய்.
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கொத்த மல்லி, உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை
ப.மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகளை போட்டு சிறிது நேரம் வதக்கிய பின் சிறிது தண்ணீர் ஊற்றி
அதில் உப்பு சேர்த்து காய்கறிகளை வேக வைக்கவும்.
* காய்கறிகள் வெந்தவுடன் அதில் கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும்.
* தண்ணீர் வற்றி கொட்டியான பதம் வந்ததும் கொத்த மல்லி தழை தூவி இறக்கவும்.
* சத்தான கேழ்வரகு – காய்கறி உப்புமா ரெடி.