நெல்லை இறைச்சி குழம்பு செய்வது எப்படி?





நெல்லை இறைச்சி குழம்பு செய்வது எப்படி?

என்னென்ன தேவை? 
மட்டன் - 1/4 கிலோ, 

தேங்காய் - 1/2 மூடி, 

நறுக்கிய சின்ன வெங்காயம் - 200 கிராம், 

முழு காய்ந்த மிளகாய் - 5, 

தனியா - 50 கிராம், 

சீரகம் - 20 கிராம், 

சோம்பு - 10 கிராம், 

மிளகு - 10 கிராம், 

இஞ்சி - 1 துண்டு, 

பூண்டு - 5 பல், 

தக்காளி - 2, 

உருளைக் கிழங்கு - 100 கிராம், 

பச்சை மிளகாய் - 5, 
நல்லெண்ணெய் - 200 மி.லி., 

நெய் - 50 மி.லி., 

கொத்த மல்லித் தழை, கறிவேப்பிலை - தேவைக்கு, 

உப்பு - தேவைக்கு, 

பட்டை - 1 துண்டு, 

கிராம்பு - 6, 

ஏலக்காய் - 5. 

செய்முறை :
நெல்லை இறைச்சி குழம்பு
உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் காய வைத்து  இஞ்சி, வெங்காயம், பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், 

காய்ந்த மிளகாய், தனியா, சீரகம், சோம்பு, மிளகு, தேங்காய்த் துருவல் சேர்த்து சிவக்கும் வரை வறுத்து எடுத்து, ஆறியதும் கிரைண்டரில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். 

கனமான பாத்திரத்தில் மட்டன், அரைத்த மசாலா, உருளைக் கிழங்கு சேர்த்து மட்டன் வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். 

கொத்த மல்லித்தழை, நெய் ஊற்றி சூடாக சாதத்துடன் பரிமாறவும்.
Tags: