உருளைக்கிழங்கு தயிர் கிரேவி செய்வது எப்படி?





உருளைக்கிழங்கு தயிர் கிரேவி செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
உருளைக் கிழங்கு தயிர் கிரேவி செய்வது
இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். 

அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு. உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும். 

உருளை கிழங்கை பலவிதமாவும் நம்மால் சமைக்க முடியும். முக்கியமாக தற்போது நடைமுறையில் இருக்கும் உருளை கிழன்கினால் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகள் பலதும் மக்களால் விரும்பி உண்ணபடுகிற்து.
தினமும் தயிரை சாப்பிடுவதால், இதயம் வலுப்பெறும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது. தயிரை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படும். மேலும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் வரும் தொற்றுக்களை எதிர்க்கிறது.

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் சி-யை அளிக்கிறது. 

த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌ கொ‌ண்டு‌ள்ளது. தயிரில் அதிகமான புரோபயாடிக் உள்ளது. இது நமது குடலில் நல்ல பாக்டீரியா உற்பத்தியாக துணை புரிகிறது. 
மேலும் நமது செரிமானத்திற்கும் மெட்டபாலிஸத்திற்கும் தயிர் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு போன்றவை ஏற்படாது. 
தேவையான பொருட்கள்:

பேபி உருளைக்கிழங்கு - 10-12 (வேக வைத்து தோலுரித்தது)

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)

சீரகம் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

தயிர் - 3 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

மல்லி தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு வெங்காயம், தக்காளி சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அதில் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.

பின் அதில் உருளைக் கிழங்கில் ஒரு ஓட்டை போட்டு சேர்த்து, தேவை யான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், உருளைக் கிழங்கு தயிர் கிரேவி ரெடி!!!
பெரும்பாலும் அனைவருமே இரவு நேரத்தில் எளிதாக ஜீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். 
எனவே தயிர் என்பது செரிமானத்தை நிதானமாக்கும் என்பதால், தயிரை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும். லாக்டோஸ் இன்டாலரன்ஸ் இருப்பவர்கள் பால் பொருட்களை செரிமானம் செய்ய முடியாது.
Tags: