எளிய முறையில் பச்சரிசி புட்டு செய்வது எப்படி?





எளிய முறையில் பச்சரிசி புட்டு செய்வது எப்படி?

பச்சரிசி சாப்பிட்டால் உடல் சதைப் பிடிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள். எனவே, உடல் மெலிந்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். பச்சரிசியை சாப்பிட்டால் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகும். 
பச்சரிசி புட்டு
உடல் மெலிந்து கொழுப்புச் சத்தே இல்லாமல் பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். பச்சை அரிசி எனப்படுவது கடின அரிசி எனவும் அழைக்கப் படுகிறது. 

அந்த வகையில் நார்ச்சத்து குறைவாக இருக்கும் இந்த அரிசியை அதிகம் சாப்பிட செரிமான சிக்கல்கள் ஏற்படுவதோடு அஜீரணம், மலச்சிக்கல் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. 

பச்சரிசியில் காலி கார்போ ஹைட்ரேட்டுகள் காணப்படுகின்றன. இவை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. அந்த வகையில் உடல் உஷ்ணத்தை அதிகரித்து அடிவயிற்று வலி பிரச்சனைக்கும் காரணமாகிறது.

புட்டு செய்யும் போது ஈர அரிசி மாவைத் தான் பயன் படுத்த வேண்டும். ஈர அரிசி மாவை வீட்டிலேயே தயாரித்து செய்யும் போது புட்டு பூ போல் வரும்.

தேவையானப் பொருள்கள்:

பச்சரிசி - ஒரு கப்

வெல்லம்_3/4 கப்

ஏலக்காய் - 1

உப்பு - ஒரு துளிக்கும் குறை வாக‌

முந்திரி - 5

உலர் திராட்சை - 10

செய்முறை:

முதலில் பச்சரி சியைத் தண் ணீரில் நனைத்து ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பிறகு நீரை வடித்து விடவேண்டும். அரிசி ஈரமாக இருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் கோர்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.

ஏலக்காய், வெல்லம் இவற்றைப் பொடித்துக் கொள்ளவும். ஒரு வாணலி யில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட் சையை வறுத்துக் கொள்ளவும். அரிசியை மிக்ஸி யில் போட்டு ஈர மாவாக, niceஆக‌ இடித்துக் கொள்ளவும். 

அதை இட்லிப் பானையில் வைத்து இட்லி அவிப்பது போல் அவித்து எடுத்துக் கொள்ளவும். ஆவி வெளியில் வரும் போது சிறிது நேரம் கழித்து நல்ல வாசனை வரும்.

அப்போது மாவை இட்லிப் பானையில் இருந்து எடுத்து ஆற வைக்கவும். நன்றாக வெந்த மாவு கைகளில் ஒட்டாது.
ஆறிய பிறகு துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, கட்டி களில்லாமல் மாவை உதிர்த்துக் கொள்ளவும். உதிர்த்த மாவை மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து ஒரு சுற்று சுற்றினால் பூ போல் ஆகிவிடும்.

இந்த மாவை மீண்டும் இட்லிப் பானையில் வைத்து அவிக்கவும்.மாவு ஏற்கனவே வெந்து விட்டதால் இந்த முறை சீக்கிரமே ஆவி வந்து விடும். 

எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி ஏலத்தூள், வெல்லம், முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி சாப்பிடவேண்டியது தான். இப்போது நல்ல சுவை யான, சத்தான, குழந்தைகளுக்குப் பிடித்தமான புட்டு தயார்.
Tags: