அருமையான ஆட்டு ஈரல் செய்வது எப்படி?





அருமையான ஆட்டு ஈரல் செய்வது எப்படி?

கோழி, மாட்டிறைச்சியின் கல்லீரலைவிட, ஆட்டு கல்லீரலில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது. கல்லீரல் உடலுக்கு வலிமை தரும். இரும்புச் சத்து குறைபாட்டை நீக்கி, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது. 
அருமையான ஆட்டு ஈரல் செய்வது எப்படி?
ரத்த சோகை குறைபாடு நீங்கும்.. எனவே, ரத்த சோகையால் பாதிக்கப் பட்டவர்கள் வாரத்திற்கு ஒரு முறை ஈரல் சாப்பிடுவது நல்லது. 

ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யக்கூடிய எல்லா வகையான ஊட்டச் சத்துக்களும் இந்த ஈரலில் உள்ளன. இதிலுள்ள வைட்டமின் ஏ, நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்றவற்றின் செயல்பாட்டுக்கு உதவுகிறது. 
டயட் இருப்பவர்கள், ஆட்டு கல்லீரலை 419 கிராம் அளவே உணவில் எடுத்து கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டால், சரியான உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். 

இல்லா விட்டால் கொழுப்பின் அளவு அதிகரித்து விடும். இதில், கொலஸ்ட்ரால் அதிகம் என்பதால் இதை சாப்பிடும் போது பூண்டையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

அதே போல, உடல் மெலிந்து பலமில்லாமல் இருப்பவர்கள் வாரத்திற்கு 2 முறை ஆட்டு ஈரலை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம், உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கும். 

ஆட்டுஈரல் இது மென்மையாக இருப்பதால் சிறு குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். நல்லெண்ணெயில் வேக வைப்பதால் கூடுதல் சத்து கிடைக்கும். இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான சுவையான உணவு 
தேவையான பொருட்கள்: 

ஈரல் – 500 கிராம் 

சின்ன வெங்காயம் – 100 கிராம் 

பச்சை மிளகாய் – 2 

வர மிளகாய் – 4 

மிளகுத் தூள் – 2 டேபிள் ஸ்பூன் 

சீரகம் – 1 டீ ஸ்பூன் 

மஞ்சள் தூள் – ஒரு டீ ஸ்பூன் 

கறிவேப் பிலை – இரண்டு கொத்து 

நல்லெ ண்ணை – 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு தேவை யான அளவு 
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
செய்முறை: 
முதலில் ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி ஆட்டு ஈரலை போடவும், 

அதனுடன் பொடியாக அறிந்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். அதன் பின் அடுப்பை பற்ற வைக்க வேண்டும். 

அப்பொழுது சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். அப்பொழுது தான் ஈரலானது இறுகலாக இல்லாமல் மென்மையாக இருக்கும். ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாக கிளறவும். 
பின்னர் வரமிளகாய் கிள்ளிப் போட்டு மிளகு தூள் தூவி லேசாக தண்ணீர் விடவும். மிதமான தீயில் வைத்து வேகவிடவும். அவ்வப் போது கரண்டி போட்டு கிளற வேண்டும். 
எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும். அதன் மீது கொத்த மல்லிதழை தூவினால் காரமும் மணமும் கொண்ட மிளகு ஈரல் வறுவல் தயார்.
Tags: