தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - அரை கப்
காய்கறி (பொடியாக நறுக்கியது) - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
வேக வைத்தப் பச்சைப் பட்டாணி- 1 கப்
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
தாளிக்க :
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 1
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை :
அரிசி, பருப்பை ஒன்றாக அலம்பி ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சேர்த்து சிறு தீயில் நன்கு வேக விடுங்கள்.
பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேக விடுங்கள்.
பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேக விடுங்கள்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்ற வற்றைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் நெய், எண்ணெயை ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தாளித்த பின்
வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கிய பின் காய்கறிக் கலவையைச் சேருங்கள்.
அடுத்து அதில் சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்கி யதும் தக்காளி சேருங்கள்.
அடுத்து அதில் சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்கி யதும் தக்காளி சேருங்கள்.
2 நிமிடம் வதக்கி காய்கள் வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள்.
கமகம காய்கறிப் பொங்கல் தயார்.