சுவையான சிறுதானிய இடியாப்பம் செய்வது எப்படி?





சுவையான சிறுதானிய இடியாப்பம் செய்வது எப்படி?

இயற்கையோடு இணைந்து வாழ்வதே நம் எதிர்காலம் என்று ஆகிவிட்டது. அதற்கு நமக்கு உற்றதுணையாக இருப்பவை சிறுதானியங்கள். நம் பாட்டியும் தாத்தாவும் வயதான காலத்திலும் ஆரோக்கியத்தோடு வாழ்வதைப் பார்த்திருப்போம். 
சுவையான சிறுதானிய இடியாப்பம் செய்வது எப்படி?
அதற்குக் காரணம், அவர்கள் சிறுவயதில் சாப்பிட்ட சிறுதானியங்களால் ஆன பாரம்பர்ய உணவு வகைகளே. 

ஆனால் சென்ற தலைமுறையில் நம் உணவு முறையிலும், உணவுப் பொருட்களிலும் ஏற்பட்ட மாற்றம், நமது ஆரோக்கியத்தையும் ஆயுளையும் சுருக்கி விட்டது. 

எதிர்காலத் தலைமுறை யினருக்காகவாவது இயற்கை விவசாயத்தையும் நம் பாரம்பர்ய உணவு முறையையும் மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது. 

சிறுதானியம் (Millet) என்பது வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளைக் குறிக்கும்.

தமிழத்தில் உள்ள மிக பிரபலமான காலை உணவுகளுள் இடியாப்பமும் ஒன்று. குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவுகளில் ஒன்று இடியாப்பம். இதை உண்டால் செரிமானமாவது எளிது. 

இவை முழுக்க முழுக்க ஆவியில் வேக வைக்கப்படுவதால் வயதானவர்களும் குழந்தைகளும் விரும்பி உண்பவர். மேலும் இவை எளிதில் செரிமானமானமும் ஆகின்றன.
நீரி­ழி­வைக் ­கட்­டுப்­ப­டுத்தும் கொய்யா !
அத்துடன் இவை முழுக்க முழுக்க ஆவியில் வேக வைத்து செய்வதால் வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற உணவாக இருக்கும். 

அருமையான சரி இனி சிறுதானியம் கொண்டு சுவையான சிறுதானிய இடியாப்பம் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானவை:

சாமை அரிசி - ஒரு குவளை,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சுவையான சிறுதானிய இடியாப்பம் செய்வது எப்படி?

சாமை அரிசியை 2 மணி நேரம் நன்றாக ஊற விடவும். ஊறிய அரிசியை நன்கு மிருதுவாக, சிறிது உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

மாவு கெட்டியாக இருப்பது நல்லது. உடனே இந்த மாவை இட்லித் தட்டில், இட்லி போல நன்கு வேக விடவும். பிறகு  இதனை, இடியாப்ப அச்சில் பிழிந்து எடுக்கவும்.
பலன்கள்: சாமையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். எண்ணெய் சேர்க்காமல், நீராவியில் வேக வைப்பதால், உடலுக்கு நன்மை பயக்கும்.
Tags: