இறைச்சி சமைக்க தேவைப்படும் இஞ்சி !





இறைச்சி சமைக்க தேவைப்படும் இஞ்சி !

பொதுவாகவே இஞ்சி  செரிமானம், சளி, தொண்டை வலி, குடல் பிரச்சனை, போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்டுகிறது. 
இறைச்சி சமைக்க தேவைப்படும் இஞ்சி !
வாங்கியதும் பிரெஷாக இருக்கும் இஞ்சி, காயவைத்து சுக்காக மாறிய இஞ்சி என்று இரண்டு வகையில் இஞ்சியை நாம் நம் சமையலையில் பயன்படுத்துகிறோம்.
புதிய இஞ்சி பொதுவாக சந்தையில் எளிதில் கிடைக்கும். நீங்கள் அதை கறிகளில் இஞ்சி பேஸ்டாகப் பயன்படுத்துகிறீர்கள், தேநீர் காய்ச்சும் போது தட்டி மற்றும் பல. 

இது ஒரு செழுமையான நறுமணம் மற்றும் காரமான சுவை கொண்டது, இது நீங்கள் சேர்க்கும் உணவு மற்றும் பானத்திற்கு ஒரு தனித்துவமான அமைப்பை சேர்க்கிறது.

ஆரோக்கிய நிபுணர்கள் கூற்றுப்படி, புதிய இஞ்சியில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது. இது உடலின் நச்சுத்தன்மை நீக்கி நன்றாக செயல்பட உதவுகிறது. 

புதிய இஞ்சி செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது, குமட்டலை தடுக்கிறது மற்றும் ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இஞ்சி சமையலுக்கு மட்டுமல்லாமல் வியாதிகளை குணப்படுத்தவும் பயன்படுகிறது. ஆனால் நகர வாழும் மக்கள் இதன் அருமை புரியாமல் கண்ட சிகிச்சையை எடுத்துக் கொண்டு உடலை கெடுத்துக் கொள்கின்றனர்.

எனவே இஞ்சியின் பயன்களை புரிந்துக் கொண்டு ஒரு சில நோய்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் அவற்றை குணப்படுத்தலாம்.

சுவையான கேப்பை இனிப்பு பணியாரம் செய்வது எப்படி?

பசி உணர்வுகள் அதிகம் இல்லாதவர்கள், காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்று வந்தால், பசியுணர்வு அதிகரிக்கும்.

பிரசவத்தின் போது உண்டாகும் பொதுவான பிரச்சனைகளான குமட்டல், வாந்தி போன்றவைகளுக்கு இஞ்சி சாறினை குடித்து வந்தால், அவை எளிதில் குணமாகும்.

கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு உணவு என்பது மருந்தாக தோன்றும். இது போன்ற நேரங்களில் இஞ்சியால் தயாரிக்கப்பட்ட ஊறுகாய், துவையல் போன்ற பொருட்கள் பசியினை தூண்டி, பசியின்மையைப் போக்குகிறது.

கீமோதெரபி போன்ற சர்ஜரியின் போது உண்டாகும் குமட்டலை சரி செய்கிறது. மூட்டுவலி, சதைப் பிடிப்புப் போன்ற வலிகளைக் குறைக்கும் மருந்தாகவும் இது பயன்படுகிறது.

இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை  நீங்கும்.
மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி  என்பன நீங்க இஞ்சியை  துவையல், பச்சடி செய்து சாப்பிட வேண்டும்.
கடுமையான போதையையும் முறிக்கும் சக்தி இஞ்சிக்கு இருப்பதாக அறிஞர்கள் பலரும் கண்டறிந்துள்ளனர். 

எனவே, இஞ்சியை நம் அன்றாட உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் பல நோய்களை நாம் எதிர்க்கலாம்.
Tags: