வெள்ளை நிற நஞ்சுப் பொருட்கள் உப்பு, சீனி !





வெள்ளை நிற நஞ்சுப் பொருட்கள் உப்பு, சீனி !

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சர்க்கரை என்பதே வெள்ளை நஞ்சாக கருதப்பட்டு வருகிறது. 
வெள்ளை நிற நஞ்சுப் பொருட்கள் உப்பு, சீனி !
ஆனால் மற்றொரு வெள்ளை அபாயம் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது அது  உப்பு. எவ்வளவு ருசியாகச் சமைத்தாலும் உப்பில்லா விட்டால் அதை வாயில் வைக்க முடியாது என்பது உண்மை தான்.

அதே நேரம், உப்பு அளவுக்கு அதிகமாகும் போதும் பல உபத்திரவங் களை அளித்து விடும். உங்கள் உடம்பில் உப்பு அதிகரித்தால், அதிகமான தண்ணீரை உடம்பு சேர்த்து வைத்துக் கொள்ள ஆரம்பிக்கும்.

அப்போது உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினைகள், சிறுநீரகக் கற்கள் ஏன் பக்கவாத பாதிப்பு கூட ஏற்படும். 

அதிகமான உப்பு, ரத்தக் குழாய்களில் படிந்து, சீரான ரத்த ஓட்டத்துக்குத் தடையை ஏற்படுத்துவதே முக்கிய காரணம். இந்த அடைப்பு நீடிக்கும் போது இதய நோய்கள், மாரடைப்பு போன்ற ஆபத்துகள் அடுத்து வரும். 

32 நாடுகளில் 10 ஆயிரம் பேர் அன்றாடம் உணவின் மூலம் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

அதில், அன்றாடம் 6 கிராம் உப்பு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்து வதைக் கண்டுபிடித்தனர். அது இதய நோய்களின் அடித்தளமாகவும் அமைகிறது என்பதை அறிந்தனர். 
பரம்பரை ரீதியாக இதய நோய் பிரச்சினைகள் இல்லா விட்டாலும் அன்றாட உப்பு அளவில் கவனம் வைப்பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவில் அதிகமாக உப்புப் போட்டுக் கொள்ளும் வழக்கம் எனக்கில்லையே என்று நீங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளில் உப்பு அதிகமாகச் சேர்க்கப் பட்டிருக்கிறது.

உங்களுக்கு அடிக்கடி குடும்பத்துடன் துரித உணவகங்களில் சாப்பிடும் வழக்கம் இருந்தால் அதன் மூலமும் கூடுதல் உப்பு உங்களுக்குள் செல் கிறது.

உடனடி உணவுகளிலும் பேக்கிங் செய்யப் பட்டு வரும் உணவுகளிலும் அவற்றைக் கெடாது பாதுகாக்கும் ‘பிரிசர்வேட்டிவ்’ ஆக உப்பு பயன் படுத்தப் படுகிறது.

பாக்கெட் பாப்கார்ன், ஊறுகாய், சாஸ் பதப்படுத் தப்பட்ட உணவுகளிலும் உப்பு அதிகம். கடைகளில் கிடைக்கும் பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற வற்றில் கூட உப்பு இருக்கிறது. 

இப்படி பெரும்பாலான உணவுப் பொருட்களில் உப்பு சேர்க்கப்படு வதற்குக் காரணம் அது எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கும் பாதுகாப்புப் பொருள் என்பது தான்.

சரி, உப்பினால் ஏற்படும் உபத்திரவங் களைத் தவிர்ப்பது எப்படி? உடம்பிலிருந்து நச்சுக் கழிவுகளை எல்லாம் வெளியேற்றும் வகையில் நிறைய தண்ணீர் குடியுங்கள்.

காரசாரமான நொறுக்குத் தீனிகள், ஊறுகாய் போன்றவற்றைத் தவிருங்கள். துரித உணவுகளைத் தவிர்த்து, வீட்டு உணவை விரும்புங்கள்.

நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள். உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்தை அவை அளிக்கும்.

உடம்பில் தண்ணீர் தேக்கம் ஏற்படுவதால் நச்சுகளின் அதிகரிப்பை நீராவிக் குளியல் போன்றவை மூலம் போக்கலாம்.

பேக்கிங் உணவுகளில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். சோடியம் குளோரைடு என்று குறிப்பிட்டிருப்பதால் நாம் அதைக் கவனிக்காமல் போகலாம்.

உப்பைக் குறைத்து சுவையைக் குறைக்காமல் சமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுங்கள். அதற்கேற்ப நறுமணப் பொருட்கள் போன்ற வற்றைச் சேருங்கள்.

உணவில் உப்பை கூடிய வரையில் குறைத்துக் கொள்ள வேண்டும். ஏன்?

இலங்கையில் தற்போது இருதய நோயினால் இறப்ப வர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தினமும் மாரடைப் பினாலும், பாரிச வாதத்தினாலும் பலர் மரணிக்கிறார்கள்.

இவர்களை விட மாரடைப்புத் தொடர்பான திடீர் தாக்க ங்களினால், அனேகம் பேர் பாரிச வாதத்தினால் எழுந்து நடமாட முடியாமல் கட்டிலிலேயே இருக்க வேண்டிய அவல நிலையும் தோன் றுகிறது.

கொழும்பு மாவட்ட த்தில் மாத்திரம் வயது வந்த ஒவ்வொரு 100 பேரில் ஒருவர் பாரிசவாத த்தினால் பாதிப்பு க்குள்ளாகி யிருக்கிறார். 
அதியுயர் இரத்த அழுத்தமே ஒருவர் பாரிசவாத நோயாளியாக மாறுவதற்கு பிரதான காரணமாகும்.

இந்த நோய்த் தாக்கங் களுக்கு ஏற்புடைய வகையில் பொது மக்களுக்கு வழி காட்டல்களையும், விழிப்புண ர்வையும் ஏற்படுத்து வதற்கான

பாரிச வாத வாரத்தை மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் ஏப்ரல் 1ஆம் திகதிவரை தேசிய பாரிசவாத சங்கம் வெற்றிகர மாக நாடெங் கிலும் நடத்தியது.

பொதுவாக பாரிசவாத த்தினால் பாதிக்கப்படும் நோயாளி ஒருவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றால் இரண்டு மணி நேரத்துக்குள் அவருக்கான சிகிச்சையை வைத் தியர்கள் ஆரம்பிப் பார்கள்.

சில பாரிசவாத தாக்குதல்கள் கடுமையாக இருக்காத பட்சத்தில் நோயாளி ஓரிரு வாரங்களில் பாரிசவாதத் திலிருந்து 

முற்றாக குணமாகு வதற்கான வாய்ப்புக்களும் இருப்பதாக வைத்தியர்கள் நம்பிக்கை வைத்துள் ளார்கள்.

ஆயினும், பாரிசவாத த்தினால் பாதிக்கப்ப டுபவர்களில் நூற்றுக்கு எண்பது சதவீதத் தினர் ஒருகால் அல்லது ஒருகை வலுவிழந்த நிலை யில் இருப்பதுடன்,

மேலும் சிலர் பாரிசவாத த்தினால் படுத்த படுக்கை யாக பல்லாண்டு காலமிருந்து இறுதியில் மாண்டு விடும் அவலநிலை யையும் எதிர்நோக்கு கிறார்கள்.

வெள்ளை நிற நஞ்சுப் பொருட்கள் உப்பு, சீனி !
உணவுடன் அதிகமாக உப்பை சேர்த்துக் கொள்ளுதல் இருதநோய்க்கு பிரதான காரணியாக அமைகின்றது.

அத்துடன் மக்கள் பாண், சோஸ், கேக், பிஸ்கட் உடனடியாகத் தயாரிக்கக் கூடிய உணவு வகைகளை பெரும்பாலும் உண்பதும் இருதநோய் மற்றும் பாரிசவாதத்துக்கு இன்னு மொரு காரணமாகும்.

உடலில் வலி  இருக்கும் இடத்தில் ஐஸ் கட்டி ஜாலம் !

சீன உணவில் அதிகமாக உப்பு கலக்கப்படுவதனால் அது இரத்த ஓட்டத்தில் கலந்து நாடி நாளங்களை அடைப்பதற்கு காரணமாக இருக்கிறது என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள்.

எனவே மக்கள் பாரிசவாதத்தை தவிர்க்க வேண்டுமாயின் கூடிய வரை உப்பை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இருதய நோய் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

உப்பில்லா பண்டம் குப்பையில் வீசப்பட வேண்டு மென்ற கீழைத்தேய மக் களின் பழக்கத்தை நாம் கைவிடுவது அவசியம்.

பொதுவாக எந்த வொரு உணவிலும் உப்பு சேர்க்கப்படும் போது அது உண்மையான சுவையை ஏற்படுத்துகிறது. 

ஏதோவொரு உணவில் உப்புக் குறைவாக இருந்தால் கூட அதன் சுவை குறைந்து விடும். இது ஒரு யதார்த்த பூர்வமான வாதம் தான். 

ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப உப்பை சாதாரண மக்கள் கூட மிகக் குறை வாக உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

கீழைத்தேய மக்கள் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற பதத்தை நன்றி உணர்வை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தினாலும் ஒரு மனிதன் தனது வீட்டில் 

ஒருவருக்கு விருந்துபசாரம் ஒன்றைச் செய்யும் போது அவர் அந்த உணவில் உப்பை கலந்திருப்பதே மனித பண்புக ளுக்கு ஏற்புடைய பழக்கமாகும்.
நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் அந்த நாடு பொருளாதார ரீயி லும் மற்றெல்லா விதத்திலும் வளர்ச்சியடையும். 

அதற்கேற்ப நம் நாட்டிலும் நோய்களைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் இப்போது தக்க நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

நோய்களைத் தடுப்பதனால் நோயாளி களுக்கு அரசாங்கம் ஆஸ்பத்திரிகளில் செலவிடும் பணத்தை பெருமளவில் மீதப்படுத்தி அ

தனை அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

இது போன்று மது அருந்துதல், சிகரெட் புகைத்தலும் இருதய நோயை ஏற் படுத்துவதற்கு இன்னுமொரு பிரதான காரணமாகும்.
சீனி - போதைப்பொருள் இரண்டுமே விஷம் தான்
இவ்விரண்டு தீய பழக்கங் களை கணிசமான அளவு குறைப்பதற்காக அரசாங்கம் சமீபத்தில் மது மற்றும் சிகரெட்களின் விலையை உயர்த்தி யிருப்பதும் ஒரு வர வேற்கத்தக்க செயலாகும்.

பாக்கிய வான்களே மனித பிறப்பெடுப் பார்கள் என்ற ஒரு ஐதீகம் இருக்கி றது. 

அவ்விதம் மனிதப் பிறப்பெடுத்த நாம் எங்கள் வாழ்க்கையின் போது நாட்டிற்கும் மனித குலத்திற்கும் நற்பணிகளை செய்து முடித்த பின்னர் இவ்வுலக வாழ்க்கையை விட்டு விடைபெற வேண்டும்.

இதுவே வாழ்க்கையின் யதார்த்தம். மனிதப் பிறப்பெடுத்த பாக்கிய வான்களாகிய மக்கள் பாரிசவாதம் போன்ற நோய்களினால் 

பல்லாண்டு காலம் படுத்த படுக்கையாக இருந்து தனக்கும், தனது சுற்றத் தாருக்கும் பிரச்சினையாக இருப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமாயின்
வெள்ளை நிற நஞ்சுப் பொருட்கள் உப்பு, சீனி !
மனிதர்க ளாகிய நாம் மிகவும் அவதானமாக உட்கொண்டு மதுபானம் அருந்துதல், சிகரெட் புகைத்தல் போன்ற தீய பழக்கங்களை தவிர்த்துக் கொண்டு ஆரோக்கிய மான வாழ்க்கையை நட த்துவது அவசியமாகும்.

சீனி

சீனி உட்கொள்ளும் பொழுது நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய உள்ளுறுப்பு க்களின் இயக்கத்தில் கோளாறு களை ஏற்படுத்தி ஆரோக்கி யத்தைச் சீர் குலைக்கிறது.

வில்லியம் டப்டி 1975ல் எழுதிய சுகர் ப்ளுஸ் (Sugar Blues) என்ற புத்தகம் அனை வராலும் படிக்கப்பட வேண்டியது.

அவர் புத்தகத்தி லிருந்து எடுக்கப் பட்ட தகவல்கள் வருமாறு:-

கரும்பிலிருந்து எடுக்கப்படும் சீனியில், கரும்புச் சாறில் உள்ளதைப் போன்று எந்த சத்துக்களும் இல்லை. அளவுக்கு அதிகமான சீனி, உடலின் சீரான இயக்கத்தில் தடுமாற்ற ங்களை ஏற்படு த்துகிறது.

இந்தத் தடுமாற்ற த்தைச் சரிப்படுத்தும் முயற்சியில் உடல் சோடியம், பொட்டேஸியம், மெக்னீஸியம், கால்சியம் போன்ற தாதுப் பொருட்களை ஈர்த்துக் கொள்கிறது. 

இரத்தத்தில் உள்ள அமில-கார தன்மையைச் சரிப்படுத்தும் முயற்சியே இது. தினந்தோறும் சீனி உட்கொள்ளும் பொழுது பிரச்னை தீவிரமடைகிறது. 

உடலில் அமிலத் தன்மை தொடர்ச்சியாக அதிகரிக்கும் பொழுது அதனைச் சரிப்படுத்து வதற்காக இன்னும் நிறைய தாதுப் பொருட்களும் வைட்டமின் களும் ஈர்த்துக் கொள்ளப் படுகின்றன.

இந்த நேரத்தில் பற்களி லிருந்தும் எலும்பி லிருந்தும் நிறைய கால்சியம் அபகரிக்கப் படுகிறது. மொத்தத்தில் உடல் பலவீன மடைகிறது. 

அளவுக்கு அதிகமான சீனி உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது.

ஆரம்பத்தில் சீனி குளுக்கோஸ் (கிளைக் கோஜன்) வடிவத்தில் ஈரலில் சேமித்து வைக்கப் படுகிறது. 

ஈரலின் சேமிப்புத் தன்மைக்கு ஒரு வரையறை இருப்பதால், தினந்தோறும் சீனி உட்கொள்ளும் பட்சத்தில் ஈரல் பலூன் மாதிரி விரிகிறது.

ஈரலில் இடமில்லாத பட்சத்தில், கூடுதல் கிளைக்கோஜன் கொழுப்பு அமிலங் களாக இரத்தத்தில் சேமித்து வைக்கப் படுகின்றது. 

இவை எல்லா உறுப்புகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு அதிகம் இயங்காத பாகத்தில் (வயிறு, பிட்டம், மார்பகம், தொடை) சேமித்து வைக்கப் படுகின்றன.

இந்தப் பாகங்களிலும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து போகும் பொழுது, அவை இருதயம், சிறுநீரகம் போன்ற வற்றிலும் சேமித்து வைக்கப் படுகின்றன. 

இதனால் அவற்றின் இயக்கம் குறைந்து விடுகிறது. அதீத இரத்த அழுத்தம் உருவாக்கப் படுகிறது.
இதனால் இணைப்பரிவு நரம்பு மண்டலமும் (parasympathetic nervous system) அதன் கண்காணி ப்பில் இருக்கும் சிறுமூளை போன்ற

உறுப்புக்கள் சுறுசுறுப்பை இழக்கின்றன அல்லது செயலிழக் கின்றன.வெள்ளை செல்கள் பெருகுகின்றன. திசு உருவாக்கம் தாமத மாகிறது.

நம்முடைய எதிர்ப்புச் சக்தி குறைந்து போய் சூடு, குளிர்ச்சி, கொசுக்கடி, கிருமிகள் பாதிப்பு என்று எதுவாக இருந்தாலும் நம்மை விரைவில் பாதிக்கிறது. 

அளவுக்கு அதிகமான சீனி, மூளை இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கும். பெரும்பாலான காய்கறிகளில் உள்ள குளுட்டமிக் அமிலம் தான் சீரான மூளை இயக்கத் திற்குத் துணை புரிகிறது. 

அவற்றில் உள்ள 'பி' வைட்டமி ன்கள் தான் இந்த வேலையைச் செய்கின்றன. சிம்பை யோட்டிக் பாக்டீரி யாக்களால் உருவாக்கப்பட்ட 'பி' வைட்ட மின்கள் நம்முடைய குடலில் வாழ்கின்றன.

சுத்திகரிக்கப் பட்ட வெள்ளை சீனியை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளும் பொழுது இந்த பாக்டீரி யாக்கள் வாடி இறந்து போகின்றன. நம் உடலில் உள்ள 'பி' வைட்டமின் களின் அளவு குறைகிறது.

அளவுக்கு அதிகமான சீனி தூக்கத்தை ஏற்படுத் துகிறது. கணிதத் திறனும் நினை வாற்றலும் குறைய ஆரம்பிக்கின்றன.

சுத்திகரிக்கப் பட்ட சீனி வாயிலோ அல்லது வயிற்றிலோ ஜீரணி க்கப்படுவ தில்லை. மாறாக நேரடியாக கீழ் குடலுக்குச் சென்று நம் இரத்தத்தில் கலக்கிறது.

இதனால் தான் சீனி உட்கொண்ட பிறகு "திடீர் சக்தி" ஏற்படுகிறது. இரத்த நாளங்களில் இப்படித் திடுமென சுக்ரோஸ் சேருவது நன்மையை விட தீமையையே அதிகம் விளை விக்கிறது.
சீனி வயிற்றில் நிகழும் இயல்பான இயக்கத்தில் ஊறு விளை விக்கும் ஆற்றல் கொண்டது.
சீனியில் 5 விதமான கோளாறுகள்
ரொட்டி, இறைச்சி, கோக் பானங்கள் போன்ற வேறு உணவு களோடு சீனியைச் சேர்த்து உண்ணும் பொழுது வயிறு சீனியைச் சிறிது நேரம் தக்க வைத்துக் கொள்கிறது.

இறைச்சி ஜீரணம் ஆகும் வரைக்கும் ரொட்டி மற்றும் கோக் பானத்தில் உள்ள சீனி அங்கு தங்கி விடுகிறது.

இறைச்சியில் உள்ள புரதம் செரிக்கும் வரை சீனி அங்கேயே புளித்துப் போய் விடுகிறது. புரதத்தைச் சீனியோடு சேர்க்கும் பொழுது அவை நொதித்துப்போய் விஷமா கின்றன.
Tags: