புளியிட்ட கீரை செய்முறை | Puliyitta Spinach !





புளியிட்ட கீரை செய்முறை | Puliyitta Spinach !

தேவையானவை:
அரைக்கீரை அல்லது பசலைக் கீரை- ஒரு கட்டு

புளி- எலுமிச்சை அளவுக்கும் சிறிது மேலே

வெந்தயம்- 1 தேக்கரண்டி

மிளகாய்வற்றல்- 2

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 மேசைக்கரண்டி

கடுகு- 1 தேக்கரண்டி 

செய்முறை:

1. புளியை நன்றாகக் கரைத்து வைக்கவும்.

புளியிட்ட கீரை
2. மண் போகக் கீரையை அலசி வைக்கவும்.

3. மிதமான சூட்டில் ஒரு வாணலியில் வெந்தய த்தையும் மிளகாய் வற்றலையும்  சிவக்க வறுத்துத் தனியே வைக்கவும்.

4. பிறகு ஒரு பாத்திரத்தில் கீரையைப் போட்டு 2 டம்ளர் அளவு கரைத்துள்ள புளிக்கரைசலை விடவும். சிறிதளவு உப்பு சேர்க்கவும்.

5. வறுத்து வைத்துள்ள வெந்தயம், மிளகாய் வற்றலைக் கீரை, புளிக்கலவை யுடன் சேர்த்துக் கொதிக்க விடவும்.

6. கீரை வெந்ததும் காற்றாட ஆற விட்டு பிறகு மின்னரைப் பானில் அரைக்கவும்.

7. நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்க வேண்டும்.

8. அரைத்தப் புளியிட்ட கீரையுடன் கடுகு தாளிசத்தைச் சேர்க்கவும்.

9. செய்வதற்கு எளிதான புளிப்பான புளியிட்ட கீரையை பத்து நிமிடங்களில் தயாரித்து விடலாம்.

10. குழம்பு செய்வதற்குப் பதிலாகப் புளியிட்ட கீரையும் பொரியல், அப்பளம் செய்து உண்ணலாம்.
Tags: