எளிமையான சமையல் குறிப்புகள் / Simple Cooking Tips !





எளிமையான சமையல் குறிப்புகள் / Simple Cooking Tips !

வாழை சமைக்கும் பொது : - 

வாழைக் காய், வாழைப்பூ, வாழைத் தண்டு இவைகளை சமைக்கும் போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.

சர்க்கரை பொங்கலின் சுவை கூட : - 

சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம்.

இட்லி கெட்டியாக இருந்தால் : - 

இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில்

ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப் பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.

உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு : - 

உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும்.

முந்திரி பருப்பு : - 

முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

அரிசி களைந்த நீர் : - 

அரிசி களைந்த இரண்டாவது கழு நீரை சமயலுக்குப் பயன் படுத்தலாம். இதில் வைட்டமின் B6 மற்றும் B12 இருக்கிறது.

இந்த நீரில் புளி ஊற வைக்கலாம், காய்கறி வேக விடலாம்.

மிளகாய் வத்தல் வருக்கும் முன்பு : - 

மிளகாய் வத்தலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரை தேக்கரண்டி சாதரண உப்பைச் சேர்த்தால் மூக்கைத் துளைக்கும் நெடி வராது.

துவரம் பருப்பை வேக வைக்கும் போது : - 

துவரம்பருப்பை வேக வைக்கும்போது, பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால்,

சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது, குளிர்ச்சியும் கூட.

குலோப்ஜாமூன் : - 

குலோப்ஜாமூனை ஆறிய பாகில் போட்டு ஊற வைத்தால் உடையவே உடையாது, விரிசலும் ஏற்படாது.

ஊறுகாய் : - 

பொதுவாக எந்த ஊறுகாய்க்கும் கடுகு எண்ணெய் ஊற்றி விட்டால் விரைவில் கெட்டுப்போவதை தவிர்க்கலாம்.

தர்பூஸ் தோல் : - 

தர்பூஸ் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு தூள் அல்லது மிளகாய் தூள், உப்பு தூவி எண்ணெய் விட்டு வதக்கவும்.

வெள்ளரிக்காய் பொரியல் போன்று சுவையுடனும், வித்தியாசமான மணத்துடணு மிருக்கும்.

பஜ்ஜி செய்வது : - 

கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டு பஜ்ஜி செய்யலாம்.

மணக்கத் தக்காளி குழம்பு : - 

மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியே ருசிதான்.

வாழைப்பூ : - 

வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கை கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.

எலுமிச்சை சாதம் : - 

எலுமிச்சை சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.

பச்சடி செய்ய : - 

பிரியாணி மற்றும் கலவை சாதங்களுக்கு அவசராமக பச்சடி செய்ய ஒரு பிடி மிக்ஸரை தயிரில் போட்டு கலக்கி துருவிய கேரட் சேர்த்து பறிமாறலாம்.

பன்னிரை பாதுகாக்க : - 

பனீரை ஃபிரிஜில் வைத்தால், மஞ்சள் நிறமாகி விடும். ஒரு வெள்ளைத் துணியில் வினிகர் கலந்த நீரை

தெளித்து அதில் பனீரை வைத்து ஃபிரிஜில் வைத்தால் நிறம் மாறாது.
கொள்ளு தண்ணீர் : - 

 "கொள்ளு"வை வேக வைத்து வடித்த தண்ணீரைக் குடித்து வந்தால் சக்தியான உடம்பும் ஒல்லியான உடம்பும் உங்களுக்கே.

வெள்ளரி விதை : - 

பாதாம் பருப்பிற்கு பதில் வெள்ளரி விதைகளைப் பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடாது. ஆனால் உடல் வலிமை பெறும்.
Tags: