வெயில் காலம் வந்து விட்டாலே பலருக்கும் வருகிற ஒரு பெரும் அவஸ்தை நீர்கடுப்பு என்று சொல்லப்படுகிறது.
மேலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். ஆனால் அப்படி சிறுநீர் கழிக்க முயற்சி செய்யும்பொழுது சொட்டு சொட்டாக மட்டுமே சிறுநீர் வெளியேறும்.
பாலியல் ஆசைக்கு ஒரு அளவே இல்லை... உலகின் கொடூரமான பாலியல் ஆசை !
இதை வெளியே சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது என்கிற அளவிற்கு அப்படி ஒரு அவஸ்தை. லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும்.
பொதுவாக நாம் தண்ணீர் அருந்தும் அளவு குறையும் போது சிறுநீரின் அளவும் குறைந்து விடும்.
இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர்ப் பாதையில் படிகங்களாக படிந்து விடும். இதன் விளைவுதான் நீர்க்கடுப்பாக மாறுகிறது.
நீர்கடுப்பை போக்கும் அருமையான வீட்டு வைத்தியங்கள்:
பானகம்:
இதனுடன் வெல்லத்தை சேர்த்து குடித்தால் உடனே நீர்கடுப்பு நின்றுவிடும்.
வெந்தயம்:
வெந்தயத்தை லேசாக வறுத்து தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை தினமும் மோரில் கலந்து குடித்து வந்தால், நீர்குத்தல் வராது, வந்தாலும் இது போன்று குடித்தால் உடனே நீர்கடுப்பு நின்றுவிடும்.
பொதுவாக சிறுநீர் பாதையில் நச்சுக்கள் தங்கியிருந்தாலும், சிறுநீர் தொற்று ஏற்படும் வகையில் வெந்தயம் உடனடியாக நச்சுக்களை வெளியேற்றி தொற்றில் இருந்து காப்பாற்றி உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.
சின்ன வெங்காயம்:
இல்லை என்றால் மூன்று சின்ன வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிட்டாலும் சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும்.
பூப்படைந்த பெண்களுக்கு சிவப்பு அரிசி புட்டு தரும் நன்மைகள் !
அதே போன்று வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும் இதற்கு வெங்காயத்தை நசுக்கி சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வெட்டிவேர்:
வெந்நீர்:
ஒரு பாதி அளவு எலுமிச்சை பழ சாற்றுடன் எட்டு மடங்கு வெதுவெதுப்பான வெந்நீர் கலந்து வந்தால் கலந்து குடித்து வந்தால் எரிச்சல், கடுப்பு இல்லாமல் சிறுநீர் வெளியேறும்.
முக்கியமாக பெண்கள் வெள்ளி கிழமைகளிலும், ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணை தேய்த்து குளித்து வர வேண்டும்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், தர்பூசணி, லெமன் ஜூஸ், நீர்மோர் இவற்றை அடிக்கடி குடித்து வந்தாலும் இது போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.
மல்லித்தூள்:
ஒரு டம்ளர் தண்ணீருடன் ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து இரவில் தூங்கும் முன்பு ஊற வைத்து விட்டு,
சீரகம், சோம்பு, வெந்தயம், சின்ன வெங்காயம், கொத்தமல்லி விதை:
இவற்றை சம அளவு எடுத்து அரைத்து அதை மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு உடனே நின்று விடும். மோர் ஒரு சிறந்த ப்ரோ பயாடிக் உணவு ஆகும்.
மேலும் இதில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் பிரஃபுள் ஏபிக் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுத்து சிறுநீர் குழாயில் ஏற்பட்ட தொற்றுகளை அழிக்கக்கூடியது.
நன்னாரி வேர், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு, சோம்பு:
ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து, தண்ணீரில் இட்டு நன்கு காய்ச்சி கசாயம் போல் பருகி வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளும் நீங்கும்.
எலுமிச்சை சாறு:
இதில் உப்பிற்கு பதிலாக நாட்டுச் சர்க்கரையும் கலந்து சாப்பிடலாம். முக்கியமாக வெளியிடங்களில் வேலை பார்ப்பவர்கள்
15 நிமிஷத்துல எய்ட்ஸ் கண்டு பிடிக்க !
நீண்ட நேரம் பயணம் மேற்கொள்பவர்கள் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்து விட்டால், உடனடியாகச் சிறுநீர் கழித்து விட வேண்டும்.
மேலும் மிகவும் இனிப்பான காரமான உணவுகளை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.
ரேபிஸ் நோய் எப்படி வருகிறது?
பொதுவாக இங்கே சொன்னவற்றில் அனைவரும் கடைபிடித்தால் சிறுநீர் சம்பந்தமான எந்த பிரச்சனையும் வரவே வராது கோடையில் நிம்மதியாக இருக்கலாம்