தேவையான பொருட்கள்:
* கடலை மாவு – 4 கப்
* பாதாம் பருப்பு : 10-12 (சீவல் அல்லது துண்டாக்கப்பட்டது)
* சுத்தமான நெய் – 2 கப் (இளக வைக்க)
* பச்சை ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை – 2 கப் (தூளாக்கப்பட்டது)
* பிஸ்தா பருப்பு – 10-12 (சீவல் அல்லது துண்டாக்கப்பட்டது)
செய்முறை:
ஒரு வாணலியை எடுத்து அதில் நெய்யை ஊற்றி அது உருகியவுடன் அதில் கடலை மாவை சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை கிளறவும் .
அடி பிடிக்காமல் நன்றாக கிளற வேண்டியது அவசியம் பாகு நல்ல பதத்திற்கு வந்தவுடன் ஏலக்காய் தூளை போடவும்.
பின்னர் பிஸ்தா மற்றும் பாதாம் சேவலை அதில் சேர்த்துக் கிளறி ஸ்டவ்வை அணைத்துவிட்டு இந்த கலவையை வாணலியிலிருந்து ஒரு பெரிய பேசின் அல்லது பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
இந்த பாகு சிறிதளவு கடினமாகும் வரை குளிர விட்டு இந்த கலவையை மேலும் கிளறி அதில் சர்க்கரைத் தூளை (நன்கு மென்மையாகத் தூளாக்கி) சேர்க்கவும்.
பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு இதுவும் காரணமா?
இந்த கலவையை மேலும் கிளற பாகு நல்ல சமநிலைக்கு வரும் இதை எந்த கட்டியும் இல்லாதவாறு பிசைந்து ஒரு தட்டையான பாத்திரத்தை எடுத்து அதில் நெய்யை எல்லா புறமும் தடவி விடவும்.
இதற்கு கையை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்
பாத்திரத்தில் உள்ள கலவையை இந்த தட்டை பாத்திரம் அல்லது ட்ரேவிற்கு மாற்றவும்.
மேலே பாதாம் தூவல்களை தூவிப் பரப்பவும்
2-3 மணி நேரத்திற்கு இதை அப்படியே விட்டு அதனை தேவையான வடிவங்களில் வெட்டி எடுக்கவும்.
Tags: