தேவையானவை
ஆரஞ்சு தோல்
பச்சை மிளகாய்
கடுகு
எண்ணெய்
புளி
தண்ணீர்
மஞ்சள் பொடி
வெல்லம்
செய்முறை
தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி. கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு தாளிக்கவும்.
அடுத்து, 4 பச்சை மிளகாய்களை சிறிதாக நறுக்கி, அதையும், ஆரஞ்சு தோலையும்
வாணலியில் போட்டு வதக்கவும். புளி தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
சிறிது மஞ்சள் பொடி சேர்க்கவும். திக்காக ஆகும்வரை கொதிக்கட்டும். கடைசியில் கொஞ்சம் வெல்லம் போடவும். பின்னர் இறக்கி விடலாம்.
இனிப்பு, புளிப்பு, உறைப்பு கலந்த இந்த ஆரஞ்சு பழ தோல் குழம்பு மிக சுவையாக இருக்கும்.