தே.பொருட்கள்:
புளிகரைசல் - 1 கப்
மணத்தக்காளி வத்தல் - 1 டேபிள் ஸ்பூன்
அப்பளம் - 4
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
செய்முறை:
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு
தாளித்து வத்தல் + நொறுக்கிய அப்பளம் + சாம்பார் பொடி சேர்த்து நன்கு
வதக்கவும்.
பின் உப்பு + புளிகரைசல் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.