வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் ஆட்டுக்குடல் குழம்பு செய்வது எப்படி?





வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் ஆட்டுக்குடல் குழம்பு செய்வது எப்படி?

வயிற்றில் புண் இருப்பவர்கள் ஆட்டுக்குடலை சமையல் செய்து வாரம் இருமுறை சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் ஆட்டுக்குடல் குழம்பு செய்வது
தேவையான பொருட்கள் :

சுத்தம் செய்த குடல் – 1

இஞ்சி – சிறு துண்டு

பூண்டு – 4 பல்

சின்ன வெங்காயம் – 50 கிராம்

தேங்காய்துருவல் – 1/2 கப்

பெரிய வெங்காயம் – 150 கிராம்

தக்காளி – 200 கிராம்

மிளகாய் தூள் – 3/4 தேக்கரண்டி

தனியா தூள் – 1/2 தேக்கரண்டி

சோம்பு, சீரக தூள் – 1 தேக்கரண்டி

பட்டை – 2 துண்டு

லவங்கம் – 2

ஏலம் – 1

சோம்பு – சிறிதளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை : 
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். குடலை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். 

முதலில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய் இவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும். 

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, லவங்கம், ஏலம் போட்டு தாளித்த பின் அரிந்த பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும். 
தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய், தனியா, சோம்பு, சீரக பொடி, உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கிய பின்னர் சுத்தம் செய்த குடலையும் அதனுடன் சேர்த்து குக்கரை மூடி 11 விசில் விட்டு இறக்கவும். 

தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது, ஏனெனில் குடல் தண்ணீர் விட்டு வேகும். 

விசில் போனவுடன் குக்கரில் மூடியை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். வயிற்று புண் தீர்க்கும் குடல் குழம்பு ரெடி!
Tags: