சுவையான பால் அல்வா செய்வது எப்படி?





சுவையான பால் அல்வா செய்வது எப்படி?

பால் என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது. பால் ஒரு ஊட்டச்சத்து சக்தியாகும். உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால்  உதவுகிறது. 
சுவையான பால் அல்வா செய்வது எப்படி?
மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் அளிக்கிறது. நாட்டு பசுக்களின் பாலில் உடல் வலிமை தரும் வகையிலான புரதம் உள்ளது. 

பசும்பால் 90% நீர்தன்மையுடன் அடர்த்தி குறைவாகவும், எளிதில் ஜீரணிக்க கூடியது. நாட்டு பசும்பாலில் உள்ள பீட்டா கெசின் என்னும் புரதம் உடலை வலிமை அடைய செய்கிறது. 

கலப்பின பசும்பாலில் உள்ள பீட்டா கெச் என்னும் புரதம் பீட்டா  கேசோ மார்பின் என்று சொல்லப்படுகின்ற நமது உடலுக்கு ஒவ்வாத புரதப்பொருட்களை உணவுப் பாதையில் உண்டாக்குகின்றது.

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி12, கால்சியம் மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. 

ஆரோக்கியமான சருமத்தை பராமரிப்பதில் இந்த ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தோல் செல் உற்பத்திக்கும், பராமரிப்புக்கும் பால் உதவுகிறது.

தேவையானவை

பால் - 2 லிட்டர்

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

பொடித்த முந்திரிப் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - இரண்டரை கப்

சிட்ரிக் ஆசிட் (அ) லெமன் சால்ட் - கால் டீஸ்பூன்.

செய்முறை :

முதலில் அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, பாலை விட்டு சுண்டக் காய்ச்சவும். இதில் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட்டை விட்டு சிறிது நேரம் காய்ச்சவும். 
அதன் பின் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும். பால் திரிந்து அல்வா பதத்தில் வந்ததும் இறக்கவும்.
Tags: