நார்த்தங்காய் ரசம் செய்யும் முறை !





நார்த்தங்காய் ரசம் செய்யும் முறை !

தேவையான பொருட்கள்
இஞ்சி - 1 துண்டு,

பச்சை மிளகாய் - 2,

நார்த்தங்காய் சாறு - 2 முழு சாறு 

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,

பெருங்காயம், மிளகு, சீரகப் பொடி - 1 டீஸ்பூன்,

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,

உப்பு - தேவையான அளவு,

பருப்பு தண்ணீர் - 1 கப்,

கடுகு,வெந்தயம் - தாளிப்பதற்கு.
ரசம் செய்முறை:
நார்த்தங்காய் ரசம்
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். இஞ்சி, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து, 

பின் இஞ்சி, ப.மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதங்கியதும் மஞ்சள் பொடி, மிளகு, சீரகப்பொடி, பருப்பு தண்ணீர் சேர்த்து கொதி வரும் போது கொத்தமல்லி, நார்த்தங்காய் சாறு, உப்பு சேர்த்து இறக்கவும்.

பலன்கள்:

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். 
இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்தி வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப் படுவதுடன் இரத்தமும் அசுத்த மடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன .

இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்தி வந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்.

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும் போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப் படுகின்றன. 
இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும்.

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌ய் நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். 
இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம். இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரு து‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம்.
Tags: