தேவையான பொருட்கள் :
அரிசி - 1 கப்
கருப்பு உளுந்து - அரை கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
தோலுரித்த பூண்டு பல் - 20
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை :
உளுந்தையும், வெந்தயத்தையும் லேசாக வறுத்து கொள்ளுங்கள்.
அதனை குக்கரில் போட்டு அதனுடன் நன்றாக கழுவி வைத்துள்ள அரிசி, பூண்டு, உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடுங்கள்.
பின் தீயை குறைத்து மீண்டும் 2 விசில் வைத்து இறக்கி விடுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு பொரிந்ததும், தேங்காய் துருவல் மற்றும் கறிவேப்பிலை வதக்கி, உளுந்து சாதத்துடன் நன்கு கலந்து சுவையுங்கள்.
உடலுக்கு தேவையான உன்னத சத்துக்களை இது தருவதால் வாரம் இருமுறை இதை தயார் செய்து சாப்பிடுங்கள்..