கிராமத்து மொச்சை கருவாட்டு குழம்பு செய்வது !





கிராமத்து மொச்சை கருவாட்டு குழம்பு செய்வது !

தேவையான பொருட்கள் :

மொச்சை – 1 கையளவு

கருவாடு – 100 கிராம்

கத்தரிக்காய் – 1/4 கிலோ

வெங்காயம் – 200 கிராம்

தக்காளி – 100 கிராம்

மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 8

கறிவேப்பிலை – 2 கொத்து

தனியாத்தூள் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1/2 குழிக்கரண்டி

புளி – எலுமிச்சம் பழ அளவு

கடுகு – தாளிக்க
செய்முறை :
கிராமத்து மொச்சை கருவாட்டு குழம்பு

மொச்சையை வேக வைத்துக் கொள்ளவும். கருவாட்டை மண் போக நன்கு அலசிக் கொள்ளவும். புளியை கரைத்து கொள்ளவும். கத்தரிக்காய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வறுத்து அரைத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளியை போட்டு நன்றாக வதக்கியதும் தனியாத்தூள், மஞ்சள்தூள், அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி கத்தரிக்காய், மொச்சை சேர்த்து வேக வைக்கவும்.

காய் வெந்ததும், புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்து பக்குவம் வந்ததும் அதில் கருவாட்டை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். 
உப்பை சரி பார்த்து குழம்பு கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும். இப்போது மணக்க மணக்க மொச்சை கருவாட்டு குழம்பு ரெடி. 

கருவாட்டு குழம்பை மண்சட்டியில் வைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும். உங்களுக்கு பிடித்த எந்த கருவாட்டையும் பயன்படுத்தி சமைக்கலாம்.
Tags: