குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை புலாவ் செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை புலாவ் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு வித்தியாசமான உணவுகளை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று முட்டையை வைத்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை புலாவ்
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – 1 கப்

முட்டை – 3

கிராம்பு – 3

ஏலக்காய் – 3

பட்டை – 3

மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்

கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

நெய் – 4 ஸ்பூன்

தேங்காய் பால் – 1 கப்

சின்ன வெங்காயம் – 150 கிராம்

தக்காளி சாறு – கால் கப்

புதினா – அரை கட்டு

கொத்தமல்லி தலை – அரை கட்டு

உ‌ப்பு – தேவையான அளவு

செய்முறை :
கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாசுமதி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் 

இதனுடன் ஊற வைத்த பாசுமதி அரிசியை போட்டு அரிசியில் உள்ள நீர் சுண்டும் வரை அரிசி உடையாமல் வதக்கவும்.

இதனுடன் தேங்காய் பால் 1 கப், கொஞ்சம் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும். சாதம் உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு போட்டு லேசாக நுரை வரும்படி அடித்து வைக்கவும். 

ஒரு கடாயில் நெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி சாறு ஊற்றி நன்றாக வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் எல்லா வற்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். அடுத்து அதில் முட்டை ஊற்றி இடைவிடாது கிளறி விட்டு வெந்ததும் அடுப்பி லிருந்து இறக்கவும். 

இந்த முட்டைக் கலவையுடன் சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து சூடாக பரிமாறவும். சூப்பரான முட்டை புலாவ் ரெடி.
Tags: