தேவையான பொருட்கள்.:
இளம் தளிரான கொழுந்துப் பிரண்டைத் துண்டுகள் ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி ஒரு சிறிய துண்டு,
புளி ஒரு நெல்லிக்காய் அளவு,
உளுத்தம் பருப்பு 4 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 2,
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு,
நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
செய்முறை.:
பிரண்டையைப் பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை நல்லெண்ணெய் விட்டு வதக்கவும்.
உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக நல்லெண்ணெய் விட்டு வறுக்கவும்.
வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
சிறிது அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
குறிப்பு.:
பிரண்டை, இஞ்சி ஜீரண சக்தியைத் தரும். வாயுத்தொல்லை நீங்கும். இந்தத் துவையலை சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால்…
அசத்தல் சுவையில் இருக்கும். சுட்ட அப்பளம், வடகம் இதற்கு நல்ல காம்பினேஷன்.