சிக்கன் நெய் சோறு செய்வது எப்படி?





சிக்கன் நெய் சோறு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :
சிக்கன் – 1/2 கிலோ

பாசுமதி அரிசி – 1/2 கிலோ

மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 100 கிராம்

உப்பு – தேவைக்கு ஏற்ப

எலுமிச்சைபழம் – அரை மூடி

பச்சை மிளகாய் – 10
வெங்காயம் – கால் கிலோ

தக்காளி – 3

இஞ்சி – ஒரு துண்டு

பூண்டு – 10 பல்

ஏலக்காய் – 3

கிராம்பு – 3

பட்டை – சிறிது

புதினா – கால் கட்டு

கொத்தமல்லி இலை – கால் கட்டு

முந்திரிப்பருப்பு – 10

தேங்காய் – அரை மூடி

நெய் – 100 கிராம்

சிக்கன் நெய்சோறு,
செய்முறை :
சிக்கன் நெய் சோறு
அரிசியை நன்கு கழுவி அதனுடன் 1 1/2 மடங்கு நீர் ஊற்றி குழையாமல் வேக வைத்து கொள்ளவும். இதனை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, கொத்த மல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகிய வற்றை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்.
தேங்காயை விழுது போல் அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி முந்திரி பருப்பைப் பொன்னிற மாக வறுத்துத் தனியே வைக்கவும்.

அடுத்து வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்துக் பொன்னிறமாக வதக்கவும். அதில் பாதியை எடுத்து தனியாக வைக்கவும்.

வதக்கிய வெங்காயத்துடன் தட்டி வைத்த இஞ்சி, பூண்டை சேர்த்து போட்டு வதக்கி, வாசனை வரும் போது மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும். அடுத்து அதில் தக்காளி கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் சிக்கன் துண்டு களை போட்டு நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி, கடைசியில் தேங்காய் விழுதைச் சேர்த்து சிக்கனை மிதமான தணலில் வேக வைக்கவும். 
அதனுடன் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். சிக்கன் கறி நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும், எலுமிச்சை பழத்தைப் பிழிந்து விடவும். பிறகு கொத்தமல்லி, புதினாவைத் தூவவும்.

அடுத்து அதில் ஆற வைத்திருக்கும் சாதத்தில் வதக்கிய கறி மசாலாவைக் கொட்டி நன்கு கிளறவும். கடைசியில் வறுத்த முந்திரி பருப்பு, வெங்காய த்தையும், நெய்யையும் சேர்த்து கிளறிப் பரிமாறவும்.
Tags: