என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், பச்சைப் பட்டாணி - தலா 1 கப்,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 3,
இஞ்சித் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,
பெரிய முழு தேங்காய் - 1,
உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
தேங்காயை துருவி முதல், இரண்டாம், மூன்றாம் பால் எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் மூன்றாவது தேங்காய்ப் பால், வெங்காயம், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்பு பீன்ஸ், கேரட், பட்டாணி சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு வெந்ததும் உப்பு, இரண்டாவது தேங்காய்ப் பால் சேர்த்து சிறிது கொதித்ததும் முதல் தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கி கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.