சார்மினார் பிரியாணி ரெசிபி செய்வது எப்படி?





சார்மினார் பிரியாணி ரெசிபி செய்வது எப்படி?

0
நாவில் எச்சில் ஊறும் சுவையான வாசனையான பிரியாணி செய்ய வேண்டுமா…? குங்குமப் பூபாலில் ஊற வைத்த மிருதுவான மட்டன் துண்டுக ளுடன் செய்கிற சார்மினார் பிரியாணி ரெசிபி இதோ…
சார்மினார் பிரியாணி ரெசிபி

தேவையான பொருட்கள்

அரிசிக்காக:

2 கப் நீளமான அரிசி

2-3 பிரிஞ்சி இலை

2-3 ஏலக்காய்

2-3 கிராம்பு

1 தேக்கரண்டி நெய்

1/2 கப் புதினா

1 அன்னாட்சி பூ

1-2 pcs பட்டை,

சிறிய துண்டுகள் தண்ணீருக்கு தேவையானது

உப்பு

600 gms மட்டன்

2 வெங்காயம்

2 தக்காளி

250 gms நெய்

2 கிராம்பு

2 ஏலக்காய்

2 பட்டை

தேவையான உப்பு

4-5 கிராம்பு

1-2 pcs பட்டை, சிறிய

3-4 ஏலக்காய்

1 தேக்கரண்டி சீரகம்

12-14 மிளகு

ஊற வைக்க

தேவையான அளவு உப்பு

2 மேஜைக் கரண்டி மிளகாய்த் தூள்

2 மேஜைக் கரண்டி கொத்த மல்லித் தூள்

1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்

1/2 தேக்கரண்டி கரம் மசாலா

1 கப் தயிர்

1 தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்

1 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்

2 பச்சை மிளகாய் (கீறியது)

1/4 கப் பால்

5-6 குங்குமப்பூ

1/2 கப் புதினா

2 மேஜைக் கரண்டி லெமன் ஜுஸ்

உப்பு

லேயரிங்

வறுத்த வெங்காயம்

வறுத்த பூண்டு

1 கப் குங்குமப் பூ ஊற வைத்த பால்

கொத்தமல்லி (நறுக்கியது)

1/2 கப் நெய்

for garnishing தக்காளி, நறுக்கப்பட்ட

for garnishing வெங்காயம் மற்றும் பூண்டு

எப்படி செய்வது

ஒரு கிண்ணத்தில் மட்டனை ஊற வைக்கத் தேவையான மசாலா பொருட்களை ஒன்றாக கலந்து வைக்கவும்.
கட்டுமான இயந்திரங்களை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை !
அதில் மட்டன் துண்டு களைப் போட்டு நன்றாக கிளறி 3-4 மணி நேரம் ஊறுவதற்கு ப்ரிஜ்ஜில் எடுத்து வைக்கவும். மட்டன் ஊறும் நேரத்தில் நீளமான அரிசியை தயார் செய்யவும்.

பாசுமதி அரிசியை 10-15 நிமிடம் ஊற வைக்கவும். குங்குமப் பூ ஊற வைத்த தண்ணீரில் அரிசியை வேக வைக்கவும். பாதி வெந்ததும் அரிசியை வடித்து வைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடு பண்ணவும். வெங்காயத்தை எண்ணெய்யில் வறுத்து சேர்க்கவும் அதனுடன் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்க்கவும்.

நறுக்கிய தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும். சூட்டை குறைத்து பாலை சேர்க்கவும். மசாலா பொடி சேர்த்து கலக்கவும் பால் திரியாமல் பார்த்துக் கொள்ளவும்.

இதனுடன் ஊற வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். இப்போது பிரியாணி மசாலாவை சேர்த்து தீயைக் குறைத்து வைத்து வேக வைக்கவும்.

மட்டன் முழுவதுமாக வெந்ததும் அடுப்பி லிருந்து இறக்கவும். பிரியாணியை தயார் செய்ய, பெரிய அகலமான பாத்திரத்தை எடுக்கவும்.
இரும்பு கழிவில் கட்டுமான கற்கள் !
நெய் சாதத்தை ஒரு லேயராக வைத்து, அதனுடன் வெங்காயம், கொத்த மல்லி, நெய், மற்றும் குங்குமப் பூ பால் ஊற்றி, அதன் மேல் வேக வைத்த கறியை வைக்கவும்.

இதே போல் லேயரை சாதம் மற்றும் கறி தீரும் வரை வைக்கவும். பின் பாத்திரத்தை மூடி அதன் மேல் கனமான பாத்திரத்தை வைக்கவும். மீடியம் ஹீட்டில் 20-25 நிமிடம் வேக வைக்கவும்.

பின் அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடங்களுக்கு மூடியை திறக்கவும். 10 நிமிடங்களு க்குப் பின் அரிசி உடையாமல் கிளறி விடவும். ரைத்தாவுடன் பரிமாறவும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)