சுவையான பெப்பர் சிக்கன் ரெசிபி செய்வது எப்படி?





சுவையான பெப்பர் சிக்கன் ரெசிபி செய்வது எப்படி?

சளி, இருமல் வந்து விட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டு விடலாம். தண்ணீரை சூடாக்கித் தான் குடிக்க வேண்டும்.  
பெப்பர் சிக்கன் ரெசிபி
வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும்.

வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட  வீக்கத்தைக் குறைக்கும்.  

தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும். நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. 
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது. மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். 

பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும். பெப்பர் சிக்கன் ஜலதோசத்தை குணமாக்கும். இருமலை சரி செய்யும். 

சிக்கனில் பெப்பர் கொஞசம் அதிகமாக சேர்த்தால் சுவை கூடும். சரி இனி சிக்கன் பயன்படுத்தி சுவையான பெப்பர் சிக்கன் ரெசிபி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையான பொருள்கள் :

சிக்கன் – 1/2 கிலோ

மிளகாய் தூள் – 1/2 டிஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

மிளகு – 2 டிஸ்பூன்

வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது

இஞ்சி, பூண்டு விழுது – 1/2 டிஸ்பூன்

கொத்தமல்லி – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

உப்பு – தேவையான அளவு

செய்முறை:
சிக்கனை சிறிது உப்பு, மஞ்சள் தூள் போட்டு கிளறி 5 நிமிடம் ஊற வைத்த பிறகு நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும். 

சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனில் உப்பு, மிளகாய் தூள் போட்டு சிறிது தண்ணிர் விட்டு வேக வைத்து கொள்ள வேண்டும். பிறகு அதை இறக்கி வைத்து விட்டு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு

அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி வேக வைத்த சிக்கனைப் போட்டு கிளறி 
மிளகாய்ப் பொடி, மஞ்சள்பொடி சேர்த்து உப்பு போட்டு கலக்கி வேக வைத்து ட்ரை ஆனதும் பெப்பர் தூள் சேர்த்து கொத்த மல்லி மேலாக தூவி கிளறி இறக்கி விடவேண்டும்.

பார்க்கவே சூப்பராக இருக்கும். இன்னும் சமைத்து சாப்பிட்டால் சூப்பரோ சூப்பர்.
Tags: