இயற்கை மருதாணி கெமிக்கல் கோன் எது நல்லது !





இயற்கை மருதாணி கெமிக்கல் கோன் எது நல்லது !

0
வீட்டில் விசேஷமா . பண்டிகை காலங்களா... பிறந்த நாள் கொண்டாட்டமா... திருமண சுப நிகழ்வா எதுவாக இருந்தாலும் மருதாணி இல்லாமல் பெண்கள் கொண்டாட மாட்டார்கள். 
இயற்கை மருதாணி

அழகையும் ஆரோக்ய த்தையும் இயற்கை கொடுக்கும் பொருள்க ளிலிருந்தே பெற்று வாழ்ந்து வந்தவர்கள் முன்னோர்கள். மருதாணி யின் சிவப்பைப் பெண்களின் நாணத்தோடு ஒப்பிடுவார்கள். 

மருதாணி இலையை புளி, கொட்டப் பாக்கு வைத்து அரைத்து கைவிரல்க ளிலும், உள்ளங்கை நடுவிலும் வைத்து மறுநாள் காலை காய்ந்த வுடன் கைகளைக் கழுவி தேங்காய் எண்ணெய் சொட்டு தடவி தேய்த்து அழகு பார்ப்பார்கள். 

வாசம் பிடிப்பார்கள் பெண்கள்.

இராமயணத் தில் இராவணனால் கவரப்பட்ட சீதை இலங்கையில் இருந்த போது சீதையின் அருகி லிருந்த மருதாணி மரங்கள் குளிர்ந்த காற்றை வீசியது. 
கவலை தோய்ந்த சீதையின் மனத் துக்கு இதமான வருடலைத் தந்தது. பிறகு சீதை மீட்கப் பட்டாலும் மருதாணியின் குளிர்ந்த காற்றை யும் வாசத்தையும் மறக்காத சீதை, 
மெஹந்தி கோன்கள்
மருதாணியை பெண்கள் இட்டுக் கொண்டால் வாழ்வில் சகல செளபாக்கியங் களையும் பெற்று வாழ்வார்கள் என்று வரமளித்தாள்.

இப்போது கிடைக்கும் மெஹந்தி கோன்கள் எல்லாமே மருதாணி சிவப்புக்கு பக்கத்தில் கூட நிற்க முடியாது என்பது தான் உண்மை.

கெமிக்கல் கலப்பில் உருவாகும் கோன் மெஹந்திகளின் நிறம் மருதாணி சிவப்பையும், மருதாணி வாசத்தையும் கொண்டிருக்காது என்பதோடு ஒரு கறு நிறத்தைக் கொடுக்கும்.

சித்த மருத்துவத்தில்

சித்த மருத்துவத்தில் மருதாணியின் விதை, இலை, பூ, காய், வேர், பட்டை அனைத்தும் பயன் படுத்தப் படுகிறது. இது மருதோன்றி, ஐவணம், அழ வணம் என்னும் வேறு பெயர்களிலும் அழைக்கப் படுகிறது. 
இன்று இளநரை என்னும் பிரச்னையால் பாதிப்படைபவர்களுக்கு நிரந்தர தீர்வை அளிக்கும் அருமருந்தாக மருதாணி இருக்கிறது என்றும் சொல்லலாம்.

மருதாணி சிவக்க மட்டுமல்ல சிறந்த மருத்துவத்து க்கும் கூட என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோமா:

நகச்சுற்று அவதி
நகச்சுற்று
உடல் உஷ்ணம் அதிகமிருப்பவர்கள் மாதம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து கை விரல்களில் பூசி வந்தால் நகங்களில் உள்ள கிருமி கள் மறையும். நகச்சுற்று அவதிகள் இருக்காது. நகங்களும் அழகாக இருக்கும்.

ஒற்றைத் தலைவலி
ஒற்றைத் தலைவலி
ஒற்றைத் தலைவலி பிரச்னையால் அவதிப் படுபவர்கள் மருதாணி இலையை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.
முகத்தில் உள்ள ரோமங்களை அகற்றுவதற்கு என்ன செய்யலாம்?
அடிக்கடி தலை வலியால் அவதிப்படு பவர்கள் மருதாணியை காயவைத்து பொடியாக்கி காற்றுப்புகாத டப்பாவில் வைத்து அடைத்து வேண்டிய போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

பித்த நரை
பித்த நரை
மருதாணியை இலையை அரைத்து நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தால் பித்த நரையும் இளநரையும் நாளடைவில் மறையும். 

தலையில் பேன் தொல்லைகள் இருந்தால் மருதாணி இலையை தலையணை உறையில் வைத்து அதன் மேல் படுத்து உறங்கினால் பேன் தொல்லை நிரந்தரமாக ஒழியும். பொடுகும் தீரும்.

அரிப்பு, தேமல்
அரிப்பு, தேமல்

மருதாணி வைத்தால் சிவப்பழகு மட்டுமல்ல மனநோய் தீர்ந்து மன அழகும் உண்டாகிறது. சருமங்களில் உண்டாகும் அரிப்பு, தேமல், சொறி, சிரங்கு போன்ற அனைத்து பிரச்னை களையும் தீர்க்க வல்லது மருதாணி. 

சருமத்தில் உண்டாகும் சுருக்கங் களை நீக்கி என்றும் இளமையான தோற்றத்தைக் கொண்ட சருமத்தைக் கொடுக்கிறது மருதாணி.

வயிற்று வலி 
வயிற்று வலி
மருதாணி வெளிப்பூச்சு மருந்தாக மட்டுமல்ல உள்ளுக்கும் கொடுக்கலாம். தீராத வயிற்றுவலி பிரச்னை இருப்பவர்கள் மருதாணி சாறை வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் குடித்தால் வலி பறந்து போகும். 

சீதபேதிக்கு
சீதபேதி
இரத்தம் சேர்ந்து கழியும் சீதபேதிக்கு அருமருந்து மருதாணி சாறு. மருதாணி இலை களை நீரில் ஊற வைத்து அந்த நீரை குடித்தால் உடலில் இருக்கும் நச்சுகள் முழுமையாக வெளியேறும்.
4ம் வகுப்பு பையன் செய்த வேலையா இது - இப்படி கூட பணத்தை திருடலாம் !
மருதாணி உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் என்பதால் மழைக் காலம் மற்றும் குளிர் காலங்களில் அதிக நேரம் கைகளில் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. 

கோன் மருதாணி
கோன் மருதாணி
மேற்சொன்ன நன்மைகள் எல்லாமே இயற்கையாய் வளர்ந்திருக்கும் மருதாணி செடிகளி லிருந்து பறித்து பயன் படுத்தப்படும் இலைகளுக்கு மட்டுமே பொருந்தும். 

கெமிக்கல் கலந்த கோன் மருதாணிகள் ஆரோக்ய த்தைக் கொடுக்காது. ஆரோக்யத்தை குறைக்கவே செய் யும். மருதாணி சிவப்பும் வாசமும் இம்மியளவும் கொடுக்காது கோன் மருதாணி...
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)