தேவையானவை:
புளிக்காத புது தயிர் – 1 கப்,
வெள்ளரி – பாதி,
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி (சற்று கெட்டியாக) – 1,
பச்சை மிளகாய் – 2,
உப்பு – தேவைக்கு,
மல்லித்தழை (விருப்பப் பட்டால்) – சிறிது.
செய்முறை:
வெள்ளரி, வெங்காயத்தை தோல் சீவி, நீளவாக்கில் மெல்லிய தாக நறுக்குங்கள். தக்காளி, பச்சை மிளகாயையும் மெல்லியதாக நறுக்குங்கள்.
எல்லா வற்றையும் ஒன்றாக கலந்து, தயிர், உப்பு சேர்த்து, மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.
உடலுக்கு சத்தையும் நாவுக்கு சுவையையும் அள்ளித்தரும் பச்சடி இது.