இந்த மழை காலத்திற்கு நாவிற்கு இதமான மசாலா பொரி செய்வது எப்படி என்று இப்போது தெரிந்து கொள்வோம்.
இந்த மசாலா காரப்பொரி யினை சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் இவற்றை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:-
எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – ஒரு ஸ்பூன்
பூண்டு – பொடிதாக நறுக்கியது (1 ஸ்பூன்)
காய்ந்த மிளகாய் – 6
கருவேப்பிலை – இரண்டு கொத்து
வேர்க்கடலை – 1/4 கப்
பொட்டுக் கடலை – 1/4 கப்
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
சக்கரை பொடி செய்தது – 1/2 ஸ்பூன்
தூள் உப்பு – 1/2 ஸ்பூன் (பொரியல் உப்பு இல்லை என்றால் உப்பு சேர்த்து கொள்ளவும், இல்லை யெனில் உப்பு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை)
பொரி – ஐந்து கப்
செய்வது எப்படி?
இந்த மசாலா காரப்பொரி செய்வதற்கு முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொண்டு அவற்றில் 1/2 ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
பின் அதனுடன் ஒரு ஸ்பூன் பெருங்காயம் தூள் சேர்க்க வேண்டும். அதன் பிறகு பொடிதாக நறுக்கிய பூண்டினை ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறவும்.
பிறகு 6 காய்ந்த மிளகாயினை உடைத்து போட்டு இவை அனைத்தையும் திரும்பவும் ஒரு முறை நன்றாக கிளறி விடுங்கள்.
அதன் பிறகு இரண்டு கொத்து கருவேப்பிலை, 1/4 கப் வேர்க்கடலை மற்றும் 1/4 பொட்டுக்கடலை இவை அனைத்தும் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்து கொள்ளவும்.
பின் இவற்றில் மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும், அதாவது ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் பொடித்த சர்க்கரை மற்றும் 1/2 ஸ்பூ உப்பு ஆகிய வற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.
இறுதியாக ஐந்து கப் பொரியை இந்த கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறுங்கள். பொரியானது மொறு மொறுப்பாக வரும் வரை நன்றாக கிளறி கொள்ளவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி அனைவருக்கும் பரிமாறவும்.